Sunday, March 27, 2011

இயேசு கூறியது என்ன?


இயேசு என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் இஸ்ராயீல் சமூகத்திற்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதராக இருந்தார். அவரது தூதுத்துவத்தை ஏற்க மறுத்த யூதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொலை செய்வதற்கு முடிவு செய்தனர். "மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்" என்கிறது பழய ஏற்பாடு. (உபாகமம் 21:23) இந்த தத்துவத்தின் அடிப்படையில் அவரை உலக மக்களுக்கு முன் சபிக்கப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்த வேண்டும் என்பது யூதர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால் வல்லமை மிக்க அல்லாஹ் அவனது பேராற்றலால் அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து தனது நேசத்திற்குரிய தூதரைக் காப்பாற்றினான்!  இதோ அல்லாஹ் கூறுகிறான்:

"(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவனாவான். ஈஸாவே நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவுமஎன்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும்நிராகரிப்பவர்களை விட்டும் உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை,நிராகரித்தோரை விட மறுமை நாள் வரை உயர்வாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். பின்னப் உங்களுடைய மீளுதல் என்னிடமேயாகும். அப்போது நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதில் நான் உங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன் என அல்லாஹ் கூறியதை(எண்ணிப் பாருங்கள்) (அல்குர்ஆன் 3: 54,55)

ஈஸா (அலை) அவர்களைக் கொல்வதற்கோசிலுவையில் அறைவதற்கோ யூதர்களால் இயலவில்லை! இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதற்கான தெளிவான சான்று எதுவம் கிறிஸ்தவர்களிடத்தில் இல்லை! அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர்! இதுவே மேற்கண்ட வசனம் சொல்லும் சுருக்கமான செய்தி!

யூதர்க்ள இயேசுவை ஒரு விபச்சார சந்ததி என்று தூற்றினர். அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்றும் கூறினர். அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று விட்டோம் என்றும் பெருமை பேசினர். தாங்கள் வீரம் மிக்க பாரம்பர்யத்தை உடையவர்கள் என்பதற்கு இதுஒர் அடையாளம் என்று பெருமை பேசினர்!

 இதில் வியப்பு என்னவெனில் யூதர்களின் இந்த நம்பிக்கைக்கையையும் அவர்களின் இறுமாப்பையும் சரிகாணும் வகையிலேயே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கிறது!

இயேசுவை யூதர்கள் கடுமையாகத் துன்புறுத்தி முட்கிரீடத்தை அவர் தலையில் வைத்து மரச்சிலுவையில் அறைந்தும்  ஈட்டியால் குத்தியும் கொலை செய்தார்கள் என்பதுவே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆதம் (விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் மூலம்) செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இதை இயேசு ஏற்றுக்கொண்டார் என்ற  நம்பிக்கையில் அவர்கள் ஆனந்தமடைகின்றனர்.

ஆதிபாவமும் சிலுவை சித்தாந்தமும்!

மனிதர்கள் அனைவரும் பிறவியிலேயே பாவிகளாகப் பிறக்கின்றார்கள் என்றும்,  பாவத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே கடவுள் இயேசுவாக அவதாரம் எடுத்து சிலுவையில் மரித்தார் என்பதும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்! இதைத்தான் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாக பவுல் அறிமுகம் செய்துள்ளார்!  பவுலின் கூற்றுக்களைப் பார்ப்போம்:

"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்"  (1 கொரிந்தியர் 15:14)

"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்"  (1 கொரிந்தியர் 15:17)

இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது! அறையப்பட்டது இயேசுவே என்று கிறிஸ்தவம் நம்புகிறது! இவ்வாறு முற்றிலும் முரண்பட்ட இரண்டு நம்பிக்கைகளுக்கிடையில் எது உண்மை?என்பதை சற்று ஆய்வுக்கு உட்படுத்துவோம்.

ஆதிபாவமும் பைபிளும்!

ஆதாம் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்!  இதனால் அவர் பாவியானார்! இந்த பாவம் தலைமுறை தலைமுறையாக மனிதனை வந்தடைகிறது. இதன் காரணமாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாவத்தில் பிறக்கிறது. இந்த பாவம் இயேசுவின் சிலுவை  மரணத்தால் நீக்கப்படுகிறது. இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

பைபிளில் இயேசுவின் உபதேசங்களுக்கு கிறிஸ்தவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள் எனில்... இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை இயேசு எப்போதாவது சொல்லியிருக்கிறாராஅவரது உபதேசங்களாகக் காணப்படும் பைபிளில் உள்ள ஏதேனும் வசனங்களில் இதை வலியுறுத்தி உபதேசித்திருக்கிறாராஎன்பதை சிந்திக்க வேண்டும். பைபிளில் எங்குமே இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை இயேசு சொன்னதாகக் காண முடியவில்லை.  இயேசுவுக்கு முன்னர் வாழ்ந்த எத்தனையோ தீர்க்கதரிசிகள்அவர்களின் உபதேசங்கள் ஏராளமாக பைபிளில் காணப்படுகின்றன. அவர்கள் எவருமே இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை அறிமுகப் படுத்தவில்லை.

மாறாகபைபிளில் இது யாருடைய உபதேசமாகக் காணப்படுகிறதுஇயேசுவின் சீடர்களைக் கடுமையாகத் துன்புறுத்தி இடையூறு செய்து வந்த சவுல் என்ற பவுல்! திடீரென ஒரு நாள் இயேசு இவருக்கு வெளிப்பட்டு  அருளுரை பாலித்ததாகவும் அன்று முதல் தான் திருந்தி விட்டதாகவும் அறிக்கையிடும் பவுலின் உபதேசங்களில்தான் இத்தகைய பாவ சித்தாந்தம் காணப்படுகிறது.  பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ஒரே ஒரு மனிதன் வழியாகப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்ததுஅந்தப் பாவத்தின் வழியாகச் சாவு வந்தது. அதுபோலவேஎல்லா மனிதரும் பாவம் செய்ததால்எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. (உரோமையர் 5:12)

சிலுவையில் மரித்ததன் மூலம் இயேசு மனிதர்களைப் பாவத்திலிருந்து விடுவித்தார் என்றும் பவுல் கூறுகிறார்.

"மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்" (1 கொரிந்தியர் 15:3,4)

"நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்." (உரோமையர் 4:25)

"நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடிநம்முடைய பழய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?" (உரோமையர் 6:6,7)

இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் அதனை நம்புவதன் மூலம் எல்லா மனிதர்களும் பாவங்களிலிருந்து விடுபடுவர் என்றும்அதன் காரணமாக இனி நியாயப் பிரமாணத்தின் ஏவல் விலக்கல்ககளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும்தான் பவுலுடைய வாதம்! நியாயப் பிரமணனங்களின் விதிகளைக் கடைபிடிக்கவேண்டியதில்லை என்று உபதேசிக்கும் பவுலின் கூற்றுகள்:

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில்,விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசவாசத்திற்குரியதல்ல. அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். ரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடிகிறிஸ்து நமக்காகச் சாபமாகி,நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக மீட்டுக்கொண்டார்.(பார்க்க கலாத்தியர் 3:10-14)

இப்படியிருக்கபாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. இப்படியிருக்க,நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது,அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியேவிசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும்வித்தியாசமேஇல்லை. (ரோமயர் 3:20-22) 

நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே>ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?

அதெப்படியென்றால்புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.

ஆகையால்புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால்வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.

அப்படிப்போலஎன் சகோதரரேநீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகிதேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். (ரோமர் 7:1-4)

இயேசுவின் சிலுவை மரணத்தில் நம்பிக்கை கொண்டால் எல்லா பாவங்களும் மாய்ந்து போகும். அப்படி நம்பிய பிறகு நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. விசுவாசம் மட்டும் போதும். எத்தனை பெரிய பாவங்கள் செய்தாலும் சிலுவை மரணத்தை நம்புவதன் மூலம் எல்லாப் பாவங்களிலிருநதும் தூய்மையடைந்து வெற்றி பெற்று விடலாம் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைத்தான் மேற்கண்ட பைபிள் வசனங்கள் எடுத்துக் கூறுகின்றன!

பவுலின் கொள்கைகள் - ஒர் மறுபரிசீலனை!
இயேசு வாழ்ந்திருக்கும் காலத்தில் அவருக்கும் அவரது சீடர்களுக்கும் விரோதியாகச் செயல்பட்டவர் பவுல்! இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் ஒரு நாளில் திடீரென்று தனக்கு வெளிப்பாடு ஏற்பட்டது என்று அறிக்கை விட்டார்! அவ்வாறு அறிவித்த விட்டு அவர் செய்த உபதேசங்கள் இயேசுவின் உபதேசத்துக்கு முரண் இல்லாமல் இருந்தாலாவது அவரது உபதேசங்களை ஒரளவுக்கு நியாயப் படுத்தலாம். ஆனால் அவை அத்தனையும் இயேசு எதனை சமுதாயத்திற்கு உபதேசித்தாரோஎதை வலியுறுத்தினாரோ அதற்கு முற்றிலும் முரணாக உள்ளதைப் பார்க்கிறோம். இயேசு எதைக் கடைபிடிக்கச் சொல்கிறாரோ அதைக் கடைபிடிக்க வேண்டாம் என்கிறது பவுலின் உபதேசங்கள். இந்த இடத்தில் தான் சற்று நிதானமாக சிந்தித்து இதில் நடுநிலையான ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டியிருக்கிறது.

நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிப்பதைக் குறித்து இயேசு கூறியது என்ன?

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் அழிக்கிறதற்கு அல்ல நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.  வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஆகையால் இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான் இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோபரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். (மத்தேயு 5: 17- 19 )

மேற்கண்ட பைபிளின் வசனங்களை சற்று நடுநிலையுடன் சிந்தித்துப் பாருங்கள்!

நியாயப் பிரமாணங்கள் எக்காலத்திலும் மாற்றப்படாது என்று இயேசு கூறுகிறார்!   அது மாற்றப்பட்டது என்று உபதேசிப்பவன் பரலோகத்தில் சிறுமைப் படுத்தப்படுவான் என்றும் எச்சரித்துள்ளார்!   ஆனால் இதற்கு முரணாக நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பவுல்! இதில் எதை ஏற்றுக் கொள்வது?

நியாயப் பிரமாணத்தைக் கடைபிடித்தல் என்ற ஒழுங்கு முறை இயேசுவின் மரணத்திற்குப் பின் மாற்றப்பட்டது என்றால் இவ்வாறு மாற்றப்படும் என்பதைப் பற்றி இயேசு ஏன் ஒரு வார்த்தை கூட முன்னறிவிப்பு செய்யவில்லைவானம் பூமி ஒழிந்து போனாலும் நியாயப் பிரமாணத்தின் ஓர் எழுத்தோ அல்லது ஓர் எழுத்தின் ஒரு பகுதியோ மாற்றப்படக் கூடாது என்று உபதேசிக்க வேண்டிய அவசியம் என்னநியாயப் பிரமாணம் மாற்றப்படும் என்ற பேருண்மையை இயேசு மறைத்து சமுதாயத்திற்கு மோசடி செய்து விட்டார் என்று கிறிஸ்தவர்கள் கூறப்போகிறார்களா?

ஓர் இறைதூதர் தன் சமூகத்திற்கு மோசடி செய்வதை விட்டும் பரிசுத்தமானவர் என்றே நாம் நம்புகிறோம். பைபிளின் பழய ஏற்பாட்டையும் ஒருமுறை படிப்பவர்கள் இவ்விஷயத்தில் இயேசுவின் உபதேசங்களாகக் காணப்படுபவை முந்தைய தீர்க்கதரிசிகளின் உபதேசத்திற்கு சற்றும் முரண் இல்லாமல் உள்ளதையும் பவுலின் உபதேசங்களாகக் காணப்படுபவற்றில் உள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்!

ஆதிபாவமும் பழய ஏற்பாடும்!

ஆதாம் செய்த பாவத்தினிமித்தம் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் பாவிகளாகப் பிறக்கின்றன என்ற புதிக கிறிஸ்தவ சித்தாந்தம் பைபிளின் முந்தைய தீர்க்கதரிசிகளின் உபதேசங்களில் இல்லை! இயேசுவும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. பிற்காலத்தில் பவுல் உருவாக்கிய பாவக் கொள்கைக்கு எதிராகவே பைபிளின் பழய ஏற்பாட்டின் வசனங்கள் உள்ளன. அவற்றில் சில:

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும்பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்.  (உபாகமம் - 24:16)

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லைதகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை,நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும்துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.  (எசேக்கியேல் 18:20)

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.(எரேமியா 31:30)

ஆதிபாவமும் இயேசுவின் கூற்றுக்களும்!

பிள்ளைகளை ஒருபாவமும் அறியாதவர்கள் என்று நாம் கூறுவதுண்டு. பாவத்திலிருந்து தன்னைப் பரிசுத்தப் படுத்திக்கொள்ள விரும்புபவர்களை குழந்தைகளுக்கு ஒப்பாக இயேசு உவமிக்கின்றார். பிறக்கும் குழந்தைகள் பாவிகளாகப் பிறப்பதில்லை என்ற உண்மையை இயேசு தெளிவு படுத்துகிறார்.

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால்,பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு: 18:3)

இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்,அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மத்தேயு: 19:14)


இயேசு அதைக் கண்டுவிசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்,தேவனுடைய  ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. (மாற்கு 10:14)

பாவ சித்தாந்தமும் இறை வேதமும்!

பிற்காலத்தில் மனித சிந்தனையில் உதயமான ஆதிபாவம் என்ற கொள்கையை முந்தைய தீர்க்கதரிசிகளோ அவர்கள் கொண்டுவந்ததை எடுத்துபதேசித்த இயேசுவோ சொல்லியிருக்கவில்லை என்பதைப் பார்த்தோம். முந்தைய வேதற்களை உண்மைப் படுத்தி நிலைநாட்டக் கூடிய இறுதி வேதம் குர்ஆனில் இது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

"எந்தவேர் ஆத்மாவும் மற்றதன் பாவச்சுமையைச் சுமக்காது!" (53:38)

"அல்லாஹ் அல்லாதவனையா இரட்சகனாக நான் தேடுவேன்அவனே அனைத்துப் பொருட்களினதும் இரட்சகனாக இருக்கிறான் என (நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொரு ஆன்மாவும் (தீமையை) தனக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறது. எந்த ஓர் ஆன்மாவும் மற்றதன் பாவச்சுமையைச் சுமக்காது. பின்னர்  உங்கள் மீளுதல் உங்கள் இரட்சகனிடமே உள்ளது. அப்போது நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்" (6:164)

கருணை மிக்க அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) செய்த தவறை மன்னித்து விட்டதாகத் தன் திருமறையில் பறைசாற்றுகிறான். இது குறித்த வசனத்தைப் பாருங்கள்:

"பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்புக் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும்நிகரற்ற அன்புடையவனுமாவான்" (2:37)

ஆதமின் மனமுருகிய வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அந்த வேண்டுதல் யுக முடிவு நாள் வரை பாவம் செய்பவர்கள் எவராயினும் மனமுருகி மன்னிப்புக் கோரியவர்களுக்குரிய பிரார்த்தனையாக குர்ஆனில் நிலை பெற்று விட்டது! ஆதம் செய்த பாவத்தின் பரிகாரத்தை எவரும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை! இதுவே இறைவழிகாட்டுதலில் நமக்குக் கிடைத்த செய்திகளாகும்!

பிறக்கும் எந்தக் குழந்தையும் பிறவியில் பாவியாகப் பிறப்பதில்லை. மாறாக தூய்மையான இயற்கையிலேயே பிறக்கின்றன என்ற உண்மையை என்ற உண்மையை இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கையான (ஃபித்ராவில்) பிறக்கின்றன. பெற்றோர்கள்தான் அதனை யூதனாகவோகிறிஸ்தவனாகவோநெருப்பு வணங்கியாகவோ மாற்றி விடுகின்றனர். ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போல! அவை குறைபாடு உள்ள நிலையில் பிறப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா?" (புகாரிமுஸ்லிம்)

பவுலின் கொள்கைகள் ஏற்படுத்தியிருக்கும் சந்தேகங்கள்:

இயேசு வாழ்ந்திருக்கும் காலத்தில் அவருக்கும் அவரது சீடர்களுக்கும் விரோதியாக இருந்தவர் பவுல்! இயேசுவின் சீடர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியவர் பவுல்! அவர் உருவாக்கிய பாவ சித்தாந்தமும் அதை ஒட்டியுள்ள சிலுவைக் கொள்கையும் இயேசுவின் உபதேசங்களுக்கு முரணாக உள்ளன. இது தனக்கு திடீரென வெளிப்பாடு ஏற்பட்டது என்று கூறும் செய்தியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

சிலுவை மரணம் சாபத்திற்குரியதாக  பழய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததன் மூலம் அவரை உலகுக்கு முன் சபிக்கப்பட்டவராக அடையாளப்படுத்த வேண்டும் என்பது யூதர்களின் ஆசையாக இருந்தது. யூதர்களின் இந்த ஆசையை பவுல் வஞ்சப் புகழ்ச்சியின் மூலம் தன்னுடைய உபதேசங்களாக உள்ளவற்றில் வெளிப்படுத்துவதைப் பாருங்கள்:

"மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடிகிறிஸ்து நமக்காகச் சாபமாகி,நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக மீட்டுக்கொண்டார்"  (கலாத்தியர் 3:13)

இறைதூதர்கள் அனைவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! சபிக்கப்பட்டவரை ஒரு வழிகாட்டியாக எவரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவரை நோக்கி இவர் சபிக்கப்பட்டவர் என்றால் அவரை வழிகாட்டி என்று  அறிவுடையவர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஷைத்தானை சபிக்கப்பட்டவன் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இந்த பவுலோ இறைவனின் நேசத்திற்குரிய ஓர் அடியாரை சபிக்கப்பட்டவராக அறிமுகப் படுத்துகிறார். பவுலின் வார்த்தைகளில் ஒளிந்துள்ள தந்திரங்களை கிறிஸ்தவர்கள் அறிந்து சத்தியத்தின் பால் தன் கவனத்தைத் திருப்புவது நலம்! 

Saturday, March 26, 2011

முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள்

மாநில சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும்  முஸ்லீம்களுக்கென்று  தனி இடஒதுக்கீடு செய்யப்படவேண்டும்"  என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்  மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, இன்று நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் முலாயம் பேசுகையில்,

"மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. 14 முக்கிய மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம். இந்த நிலை மாற வேண்டுமானால், மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்." என்று கருத்து பதித்துள்ளார்.

Wednesday, March 16, 2011

பட்டுக்கோட்டையில் ஒரு அதிர்ச்சி


 பட்டுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில், தபால் துறைக்குச் சொந்தமான சில மூட்டைகள், கேட்பாரற்று கிடந்தன. சிறிது நேரத்துக்குப்பின், தபால் துறை ஊழியர் ஒருவர், சாவகாசமாய் வந்து அந்த மூட்டைகளை தஞ்சை செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு, முன்பக்கம் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். அதன்பின், விசாரித்த போது, அந்த மூட்டைகள், பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் என தெரிந்தது. பல மணி நேரம் அனாதையாக கிடந்த அந்த மூட்டைகளை வேண்டும் என்றோ, தவறுதலாகவோ யாரும் எடுத்து சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். பட்டுக்கோட்டையில் இருந்து, தஞ்சை வரை உள்ள விவசாய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் காய்கறி மூட்டைகளோடு மூட்டைகளாக பஸ்சில் இருந்து இறங்கும்போது எடுத்துச் சென்றிருந்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும்.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் இந்த பகுதியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் விடைத்தாள்களை தனியாக ஒரு வேன் ஏற்பாடு செய்து சேகரித்து எடுத்துச்செல்வோம். விடைத்தாள்களை இன்ஸ்யூர்டு தபால் மூலம் பதிவு செய்வதாலும், மாணவ, மாணவியரின் எதிர்காலமே இந்த தபாலில் இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், தற்போது திருச்சியில் உள்ள தமிழ்நாடு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவரின் தவறான உத்தரவின் பேரில், ஒவ்வொரு தபால் நிலையத்தில் இருந்தும், தனித்தனியாக பொதுத்தேர்வு விடைத்தாள்களை பஸ்களில் ஏற்றிச் சென்று, தஞ்சை ரயில்வே மெயில் சர்வீசில் சேர்க்க வேண்டும். அப்படி கொண்டு சேர்க்கும் போது தவறும் விடைத்தாள்களின் கதி என்ன என நினைத்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார். ஒரு சில மார்க்குகளில் எத்தனையோ மாணவர்களின் டாக்டர், இன்ஜினியர் கனவு கானல் நீராக போகிறது. இளைய சமுதாயத்தின் வாழ்க்கையையே மாற்றி போடக்கூடிய இந்த வினாத்தாள் மூட்டைகளை கொண்டு சேர்ப்பதில் கல்வித்துறை மற்றும் தபால்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

தினமலர்

Tuesday, March 15, 2011

ஹஜ் புனிதப் பயணம்: நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.


ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு கடவுச் சீட்டு இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல     பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும்.

ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது).



இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும்.  விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.
மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  



மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.    

Sunday, March 13, 2011

மமக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்!. தமீமுல் அன்சாரி


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,  இன்று தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிட்டு  பேசப்படும் முஸ்லீம் அரசியல் கட்சிகளில் ஒன்றான  மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்கள் 11-மார்ச்-2011 வெள்ளிக்கிழமை காலை நம் அதிரைநிருபருக்காக அளித்த பிரத்தியோக நேர்கானல்.


அதிரைநிருபர்: அவசர அவசரமாக அ.தி.மு.க.வுடன் அடைக்கலம் பெற்றுள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே இதனைப் பற்றி தங்களின் கருத்து என்ன ?

தமீமுல் அன்சாரி: அவசர அவசரமாக என்ற அந்தக் கேள்வியே தவறானது தேர்தல் தேதி அறிவித்த அந்த நேரத்தில் ஏதாவது ஒரு கூட்டனில் அடைக்கலமாவது என்பது அவசர அவரமாக எடுத்த முடிவாக இருக்கும், ஆனால் மனிதநேய மக்கள் கட்சி ஏழுமாதங்களுக்கு முன்பாகவே அனைத்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாவின் அழைப்பின் பேரிலேயே அதனை ஏற்று முறையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதனால், நிதானமாக கூட்டனியிலே நாங்கள் இணைந்தோம். எனவே அவசர அவசரமான கூட்டனி என்பது தவறானது, இன்றைய சூழலில் அனைந்திந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான எங்களது அணி இருந்து கொண்டிருக்கிறது. அந்த அணிதான் 200 மேற்பட்ட தொகுதிகளில் இன்ஷா அல்லாஹ் வெற்றியை பெறும்.

அதிரைநிருபர்: எவ்வகையான நிபந்தனைகளை வைத்து மூன்று தொகுதிகளைப் பெற்றீர்கள் ?

தமீமுல் அன்சாரி: அனைந்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஒரு நியாயமான தொகுதிகளைப் பெறுவதிலே பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்தோம். ஆனால் இன்றைய அரசியல் சூழலில் ஒரு மெகாக் கூட்டனியை உருவாக்கக் கூடிய சூழல் தமிழகத்திலே ஏற்பட்டு இருக்கிறது. உதாரணத்திற்கு தமிழகத்தின் "ஹோஸ்னி முபாரக்"காக இருக்கக் கூடிய கலைஞர் கருணாநிதியும், மன்னராட்சிபோல தமிழகத்தில் சுரண்டிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தினரையும் அகற்றுவதுதான் எங்களுடைய முதல் செயல் திட்டமாக இருக்கிறது. அந்த அடிப்படையில பல்வேறு பெரிய கட்சிகளெல்லாம் எங்களது கூட்டனியில் வருகை தந்து கொண்டிருந்த காரணத்தினால், நாங்கள் ஒருசில தொகுதிகளை குறைக்க வேண்டிய ஒரு சூழல் உருவானது.

குறைந்தது 15 தொகுதிகளின் பெயர்கள் பட்டியலை செல்வி ஜெயலலிதா அவர்களிடம் கொடுத்து அதிலிருந்து 12 தொகுதிகளை நேரடியாக எங்களுக்கு வேண்டுமென்று கோறிக்கை வைத்தோம். அவர்கள் பேச்சு வார்த்தை குழுவினருடன் தொடர்ந்து பேசுங்கள் அவர்கள் இறுதி செய்வார்கள் என்றும் சொன்னார்கள். அதன் பிறகு ஐந்து சுற்று பேச்சு வார்த்தைகள் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினருடைய குழுவுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் குழுவுக்கும் நடைபெற்றது. அதன் அடிப்படையிலே கடைசியாக விட்டுக் கொடுங்கள் என்று சொல்லும்போது, ஏழு தொகுதிகள் என்று இறங்கி வந்தோம். பிறகு சூழ்நிலைகள் மிகவும் நெருக்கடியாக இருக்கிறது பல்வேறு அமைப்புகளுக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று வழியுறுத்திச் சொன்னார்கள். கடைசியாக தமிழகத்திலே மூன்று தொகுதிகளும் புதுச்சேரியிலே ஒரு தொகுதியும் தருவதாக அவர்கள் சொன்னார்கள் இதனை ஏற்பதா வேண்டாமா என்ற பல்வேறு சிந்தனை பொறுப்பு எங்கள் மத்தியிலே ஏற்பட்டது. அந்த நேரத்திலே மீண்டும் தனித்து போட்டியிடலாமா அல்லது மூன்றாவது அணி அமைக்கலாமா எனது போன்ற பல்வேறு கருத்துகளை பல சகோதரர்களால் முன் வைக்கப்பட்டது. ஆனால் சமுதாயத்தில் பெரும்பாலான சகோதர்கள், சமுதாய ஆர்வளர்கள், அரசியல் விரும்பிகள், ஜமாத்தார்கள் வந்து கலந்து கொண்டு நீங்கள் எதிர்பார்த்த ஆறு அல்லது ஏழு எண்ணிக்கை கிடைக்காத நிலையில், இந்த மூன்றும் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை காரணம் மீண்டும் தனித்து நிற்பது ஆபத்தானது. விஜயகாந்த் போன்ற பெரிய கட்சிகளலே தனித்து நிற்கக் கூடிய நிலையில் இல்லை. எனவே அரசியல் விழிப்புணர்வு இல்லாத இச்சமூகத்தில் இதுபோன்ற முடிவுகளை நாம் எடுப்பது தற்போது நல்லதல்ல, முதலில் நல்ல தொடக்கமாக வைத்துக் கொண்டு அதிமுகவுடன் இணைய வேண்டுமென்றும் வேண்டுகோள்களையும், நிர்பந்தங்களையும் அறிவுத்தல்களையும் சொன்னார்கள்.

பலநேரம் நாம் கட்சி அமைப்பை நடத்தினாலும் எந்த சமூகத்தை முன்வைத்து நாம் சமுகப் பணி செய்கிறோமோ அந்தச் சமூகத்தின் பெரும்பான்மையோரின் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது அந்த அடிப்படியிலே இந்த மூன்று மற்றும் ஒன்று மொத்தம் நான்கு தொகுதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அதே நேரம் இந்த நான்குத் தொகுதிகளை நீங்கள் குறைவானது என்று நினைத்து விடக் கூடாது 1991க்கு பிறகு ஒரு முஸ்லீக் கட்சிக்கு தனி சின்னத்தில் நான்கு தொகுதிகள் கிடைத்திருப்பது இதுதான் முதல்முறை. இங்கே காணாமல் போன முஸ்லீம்களுடைய அரசியல் கண்ணியத்தை முதன்முறையாக் மீட்டிருக்கின்றோம். இதில் முழு திருப்தி இல்லாவிட்டாலும் ஒரு நல்ல தொடக்கமாக கருதுகிறோம், எதிர்காலத்திலே கூடுதல் தொகுதி என்ற இலட்சியத்தை அடைவோம்.

அதே நேரத்தில் இன்னொன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் மனிதநேய மக்கள் கட்சிகளை விட புகழ் பெற்ற பல்வேறு கட்சிகளின் இன்றைய நிலை என்னவென்று பார்த்தோமென்று சொன்னால் பிரபல நடிகர் சரத்குமாருடைய கட்சி தமிழகத்தில் பத்து மாவட்டங்களிலே முழுமையான ஒருங்கினைப்பாக வைச்சிருக்காங்கன்னு சொல்லலாம் அவர்களுக்கே இரண்டு தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. அதேமாதிரி பத்து பதினைந்து மாவட்டங்களில் இருக்கும் டாக்டர் கிருஷ்னசாமி பிரபலமான தலைவர் பல்வேறு தேர்தல்களை சந்தித்தவர் அவருக்கே இரண்டு தொகுதிகள்தான் கிடைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலைகளை பார்க்கும்போது மனிதநேய மக்கள் கட்சி நான்கு தொகுதிகளை சொந்த சின்னத்தில் பெற்றிருப்பதும் மிகப் பெரிய ஒரு தொடக்கம் என்பதை இந்த முஸ்லீம் சமுதாயம் பாராட்டுகிறது.

இது மட்டுமல்லாமல் இந்தச் சமுதாயத்தினுடைய பல்வேறு கோரிக்கைகளை செல்வி ஜெயலலிதாவிடம் வைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு 3.5 சதவிகித இட ஒதுக்க்கீட்டை எதிர்காலத்தில் கூடுதலாக்குவதற்கான சட்ட முன்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கின்றோம். உருது பேசக் கூடிய முஸ்லீம்கள் தமிழகத்திலே ஆறு ஏழு மாவட்டங்களிலே பரந்து இருக்கின்றார்கள் அந்த மக்களுக்கு சமச்சீர் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது அதை நிவர்த்தி செய்வதற்கான முன் முயற்சிகளைச் செய்ய வேண்டும். அடுத்ததாக திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லீம்களின் தனிப்பட்ட உரிமைகளில் சங்கடங்களும் பாதிப்புகளும் ஏற்படுத்தும் விதத்தில் தலைவர் கருனாநிதியின் அரசால் ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ள காரணத்தினாலே அவைகளையும் எதிர்காலத்திலே அதிமுக கழக ஆட்சி அமைந்த பிறகு சரி செய்ய வேண்டும் என்பது போன்ற பெரிய கோரிக்கைகளையும் ஏராளமான துணைக் கோரிக்கைகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம். அவைகளையெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.

அதிரைநிருபர்: தேர்தல் செலவுகளுக்கு கூட்டனிக் கட்சியிலிருந்து பணம் கிடைக்கிறதா? தேர்தல் ஆனையம் பல கட்டுப் பாடுகளை விதித்துள்ளபோதும் வேறு எந்த வழிகளில் தேர்தல் செலவுகளுக்கு பணம் திரட்டுகிறீர்கள்?

தமீமுல் அன்சாரி: நாங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக இருந்தால் அனைந்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஒன்பது தொகுதியும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியும் மொத்தம் பத்து தொகுதிகளைக் கூட கொடுத்திருப்பார்கள். தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றிருப்பார்கள் ஆனால் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயல்படமுடியாது என்ற காரணத்தினால், எம்.எல்.ஏ.க்களாக பத்து பேரும் ஆகக் கூடிய வாய்ப்பு இருந்தும் கூட சமுதாயத்தின் தன்மானம் மீண்டெடுக்கப் படவேண்டும் என்ற சொந்தச் சின்னம், குறைவான தொகுதிகள் கிடைத்தாலும் பரவாயில்லை, தேர்தல் நிதி அவர்கள் தராவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலையைத்தான் எடுத்திருகின்றோம். எனவே எங்கள் கூட்டனியிரிடம் பத்து பைசாவைக் கூட பெறவில்லை என்பதை ஊரரிந்த உண்மையரிந்த அரசியல் அறிவரிந்த அனைவருக்கும் தெரியும்.

இரண்டாவது, இந்த தேர்தல் செலவுகளை எப்படி செய்யப் போகிறீர்கள் என்று கேட்டீர்கள், எங்களுடைய தாய் கழகமான த.மு.மு.க. பதினாறு ஆண்டுகளை கடந்து பதினேழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. எங்களுக்கு அம்பானிகளோ, டாட்டாக்களோ, வளைகுடாவில் இருக்கும் பெரும் முதலாளிகளோ உதவி செய்யவில்லை, சாதாரன கூலித் தொழிலாளிகள் நடுத்தர மக்கள் சிறு வணிகர்கள் சிறு முதலாளிகள் என்று சமுகத்தின் சாமானிய மக்கள் அளிக்கும் நிதியை வைத்துதான் எங்களது தாய் கழகமான த.மு.மு.க.வை நடத்தி வருகிறோம் அந்த மக்களின் நிதியைக் கொண்டுதான் இன்ஷா அல்லாஹ் தேர்தலையும் சந்திப்போம்.

அதிரைநிருபர்: போட்டியிடும் தொகுதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல் உள்ளதா?

தமீமுல் அன்சாரி: நாங்கள் தனிநபர் சார்ந்த அமைப்பல்ல தனிநபர் துதிபாடுவதையும் தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய ஒரு பேரமைப்பிலிருந்து வெளியே வந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் எங்களுடைய எந்த முடிவாக இருந்தாலும் மாநில செயற்குழுவிலே ஆலோசனை செய்து அதன் பின்னால் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவால் முடிவு அதை நாங்கள் அறிவிப்போம் 15ம் தேதி எங்களுடைய மாநில செயற்குழு கூடி ஆலோசிக்கிறது 16ம் தேதி எங்களுடைய உயர்நிலைக் குழு கூடி அநேகமாக 17ம் தேதி வேட்பாளர் பட்டியலை இன்ஷா அல்லாஹ் அறிவிப்போம்.


அதிரைநிருபர்: ம.ம.க.போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று (இன்ஷா அல்லாஹ்).. எதிரனியினருக்கு அதாவது தி.மு.க கூட்டனிக்கு பெரும்பான்மை பெற தேவையிருக்கும் பட்சத்தில் உங்களது ஆதரவை கோறினால் உங்களது நிலைபாடு என்ன ?

தமீமுல் அன்சாரி: இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எங்களுடைய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகக் கூட்டனிதான் ஆட்சி அமைக்கப் போகிறது... தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்பதை நம்புவதே ஒரு பகல் கனவு, கானல் நீர், அத்தைக்கு மீசை முளைத்திருப்பதுபோல்.

அதிரைநிருபர்: ஒற்றுமை ஒற்றுமை என்று வாய்கிழியப் பேசும் இயக்கங்களும் சமுதாய அமைப்புகளும் எதைச் சாதித்தன? த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வையும் சேர்த்தான் கேட்கிறோம் ?

தமீமுல் அன்சாரி: சமுதாய ஒற்றுமை அவசியம், சமுதாய ஒற்றுமை தேவை என்ற கருத்து நமது சமூகத்திலே அரிதுபெரும்பான்மையாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அந்தக் கருத்திலே நூறு சதவிகிதம் உடன்பாடுண்டு. ஆனால் நடைமுறையில் இந்த உலகம் இந்த ஊர் எப்படி இருக்கிறது இங்கு கூற வேண்டும் ஒரு பதினைந்து நபர்கள் கொண்ட கூட்டுக் குடும்பத்தை ஒற்றுமையாக வழிநடத்த முடியாத நிலைதான் இன்றைய சூழல் இருக்கிறது.

ஒரு பத்தாயிரம் இருபாதிரம் மக்களைக் கொண்ட அதிராம்பட்டினத்தில் கூட ஒரு ஐக்கிய ஜமாத்தை நிறுவி நடத்த முடியவில்லை. அப்படியிருக்கும்போது தமிழகத்தில் ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஒரு ஊரிலே ஐக்கிய ஜமாத்தை நிறுவுவதற்கு ஒரு போராட்டத்தை நடத்தும்போது ஐம்பது இலட்சத்திற்கும் மேல் பரந்து விரிந்த தலைமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படுத்துவது என்பது ஒரு எளிதான காரியம் அல்ல. ஆனாலும் எப்படியாவது அதனை நெருங்கி விடவேண்டும் என்று பாடுபடுகிறோம், அவர்களுடைய கருத்தினை ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக பல்வேறு முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதான் நான் சொல்வது 2001லே குஜாரத்திலே கலவரம் ஏற்பட்டபோது தமிழகத்திலே எல்லா முஸ்லீம் அமைப்புகளோடு இணைந்து ஒரே மேடையிலே கலந்து கொண்டு எங்களது கண்டனங்களை வலியுறுத்தியிருக்கிறோம், அதே போன்று திருமண பதிவுச் சட்டத்தை கலைஞர் கருனாநிதி அவர்களின் அரசாங்கம் கொண்டு வந்து முஸ்லீம்களுடைய தனியுரிமைகளுக்கு எதிராக செயல்பட்டபோது அனைத்து முஸ்லீம் அமைப்புகளோடு கலந்து இது குறித்து அமைச்சர் துரைமுருகன் அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான அனைத்து முஸ்லீம் அமைப்புகள் அடங்கிய குழு சென்று அவர்களை சந்தித்து அதில் திருத்தம் செய்வதற்கான முழு முயற்சியும் செய்தது. அதுவும் அடுத்து திருவிடைச்சேரி எனும் ஊரிலே ஒரு படுகொலைச் சம்பவம் நடைபெற்றபோது அது ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் கண்ணியத்தை பாதிக்கக் கூடிய செயலாக இருக்கிற காரணத்தினாலே 19 முஸ்லீம் அமைப்புகள் இணைந்து இது குறித்து பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளிலும் நாங்கள் ஈடுபட்டோம்.

இப்போதும்கூட நாங்கள் தொகுதிகளைப் பெற்ற பிறகு சகோதர அமைப்புக்களை நாங்கள் சென்று சந்தித்து வருகிறோம். நாகர்கோவிலுக்குச் சென்று ஜாக் அமைப்பின் தலைவர் கமாலுதீன் மதனி அவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சந்தித்து பேசினார்கள். அடுத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையகத்திற்கு சென்று அதன் தலைவர்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் சந்தித்து பேசினார்கள். தொடர்ந்து பாக்கர் அவர்களுடைய இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பிடமும் பேசியிருக்கிறோம், ஜமாத்துல் உலமா அமைப்புடனும் பேசியிருக்கிறோம், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் சந்தித்து பேசியிருக்கிறோம் இதேபோன்று ஜமாத்தே இஸ்லாமி, ஜமியத்துல் அஹ்லே ஹதீஸ் போன்ற சகோதர அமைப்புகளோடு சந்தித்து பேசி அரசியலிலே ஒரு ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். இவைகளெல்லாம் ஒற்றுமைக்கான முயற்சியின் அடித்தளங்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பிறகு இதனை மேலும் வலுவூட்டுவதற்கு மனிதநேய மக்கள் கட்சியும் எனது பெருமைமிகு தாய் கழகமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கும் இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர்: நேற்றைய தினம் பேட்டி அளித்த முஸ்லீம் லீக் மகளிர் அமைப்பு சகோதரி ஃபாத்திமா முசாஃபர் அவர்கள் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார் இச்சந்தர்பத்தை பயன்படுத்தி அவரை உங்கள் அணிக்கு சேர்த்துக் கொள்ள முயற்சிப்பீர்களா?

தமீமுல் அன்சாரி: முஸ்லீம் இயக்கங்கள் எந்தக் காலத்திலும் பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை பல்வேறு அமைப்புகள் செயல்படலாம் அவர்கள் மத்தியிலே மாற்றுக் கருத்துகள் இருக்கலாம் தவறு கிடையாது. ஆனாலும் முஸ்லீம் லீக் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களால் உருவாக்கப்பட்ட நீண்ட நெருங்கிய அரசியல் பாரம்பரியமிக்க ஒரு கட்சி அந்தக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை உதயசூரியன் சின்னத்தில் கொடுத்ததே ஒரு அவமானம் என்பது முஸ்லீம் சமுதாயத்தின் கருத்து. மூன்றைக் கொடுத்து அதில் ஒரு தொகுதியைப் பறித்த கலைஞர் கருனாநிதியுடைய சர்வாதிகாரப் போக்கை முஸ்லீம் சமுதாயம் கடும் எதிர்ப்பை தெரிவித்துக்கிறது இந்த நிலையிலே கலைஞர் கருனாநிதி முஸ்லீம் சமுதாயத்தை எப்படியெல்லாம் கிள்ளிக் கீரையாக நினைக்கிறார் என்பதற்கு உதாரணம்.

அவரால் கொங்கு முன்னேற்றக் கழகத்திலிருந்து ஒரு தொகுதியை கூட பெற முடியவில்லை எல்லோரும் சொல்கிறார்கள். கொங்கு முன்னேற கழகத்தின் மதிப்பு என்பது ஐந்துதான் என்று, காங்கிரசை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு கூடுதலாக இரண்டு தொகுதிகளை கொடுத்து ஏழு தொகுதிகளாக அதிகரிச்சு கொடுத்திருக்காங்க, அதிலிருந்து ஒரு தொகுதியை பறித்திருக்கலாம். அல்லது திருமாவளவன் என்பவருடைய சக்தி என்பது ஏழு அல்லது எட்டு தொகுதிகள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் அவர்களிடமிருந்தாவது ஒன்றை கேட்டுப் பெற்றிருந்திருக்கலாம். டாக்டர் ராமதாஸுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்தார் ஸ்டாலின் அவர்கள் லண்டன் செல்வதற்கு முன்பாக ப.ம.க.விற்கு மொத்தமே அதிகபட்சமாக இருப்பத்தி ஐந்து தொகுதிகள்தான் தரமுடியும் என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர் லண்டனில் இருக்கும்போது கலைஞர் கருனாநிதி காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே முப்பத்தி ஓர் தொகுதியை கொடுத்திருக்கிறார் அவர்களிடமிருந்தாவது அந்த மூன்றை எடுத்து பெற்று கொடுத்திருக்கலாம். ஆனால், மிக மிக குறைவாக முஸ்லீம் லீக்கிற்கு கொடுத்த மூன்றில் ஒன்றை பறித்துக் கொண்டது மிக மிக அநியாயம் சகோதரி ஃபாத்திமா முசாஃபர் அவர்களின் குரல் ஒட்டு மொத்த முஸ்லீம் லீக் தொண்டர்களின் குரலாகத்தான் இருக்கிறது. இது பற்றி முஸ்லீம் லீக் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். முஸ்லீம் லீக்கிற்கு இந்நிலை ஏற்பட்டதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்திடவில்லை, வருத்ததில் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

அதிரைநிருபர்: அனைத்து முஸ்லீம்களின் வாக்குகளை ஒன்றிணைக்க வழிகள் என்ன ? எப்போது முஸ்லீம்கள் தங்களது பலத்தைக் காட்ட வாய்ப்பு ஏற்படும் ? அதற்கு ம.ம.க.வின் செயல் திட்டங்கள் என்ன ?

தமீமுல் அன்சாரி: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம் முஹல்லாக்களில் முஸ்லீம் வாக்குகளின் நிலைமை பற்றி மனிதநேய மக்கள் கட்சியில் என்ன நினைக்கிறது என்பது பற்றி அவைகளையெல்லாம் வெளிப்படையாக இப்போது விவாதிக்க முடியாது களத்தில் மிகவும் நிதானமாக சமூக மக்களின் பேராதவோடு அதனை நாங்கள் செய்து காட்டுவோம் அந்த வாக்குகள் எங்களது அணிக்கு வருகின்ற காரனத்தினால்தான் திராவிட முன்னேற்ற கழக தலைமியிலான அணி 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்கப்போகிறது என்பதை காலம் நிரூபிக்கும். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர்: பிரிந்த சகோதரர்களிடம் அதாவது த.த.ஜ. சகோதரர்களிடம் சமாதானம் பேசி சுமூகமான சூழல் உருவக்க ஏன் பகிரங்கமாக இதுவரை நீங்கள் முயற்சி செய்யவில்லை ? இதுவரை தாங்கள் சந்தித்த அமைப்புகள் பற்றி சொன்னீர்கள் அவர்களிடமும் சமுதாய நலன் கருதி ஒற்றுமைக் கரம் நீட்டலாமே ? கருத்து வேறுபாடுகளை தூக்கியெரிந்து, விட்டுக் கொடுத்துதான் போனால் என்ன ? இதனை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?

தமீமுல் அன்சாரி: விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை என்பது ஒரு பழமொழி. அந்தப் பழமொழியை நாங்கள் உணர்ந்திருக்கிறோம், நாங்கள் வலைந்து போக தயராக இருக்கிறோம், அதற்காக முதுகை ஒடித்துக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலே தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்துடம் ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்தது என்பது உண்மை, மறுக்க முடியாது.

ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் அதை சுமூகம் செய்வதற்கான சில முயற்சிகளை நாங்கள் செய்தும் வந்திருக்கிறோம். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது மனிதநேய மக்கள் கட்சி துவங்கப்பட்ட பிறகு எங்களது அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையான மக்கள் உரிமையிலே பார்த்தால் அவர்கள் மீது வைத்த விமர்சனங்கள் ஒன்று அல்லது இரண்டாகத்தான் அல்லது மூன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு அவர்கள் மீதான எந்த விமர்சனமும் செய்யாமல் நாங்கள் மவுனமாக இருந்து எங்களுடைய களத்திலே எங்களுடைய பணிகளை செய்து வந்தோம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 2009 தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவும் அதற்கு பின்னாலும் அவர்கள் எங்கள்மீது சுமத்திய அநியாமான குற்றச்சாட்டுகளும் எங்களுக்கு அவர்கள் அளித்த தொந்தரவுகளும் எங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கீழ்த்தரமான மூன்றாம் தர விமர்சனங்களும் கொஞ்ச நஞ்சமல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைகள். அதையும் மீறி நாங்கள் மவுனம் சாதித்தோம், ஆனால் அந்த மவுனத்தை பலவீனமாவர்கள் என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து இவர்கள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் ஓர் எல்லையுண்டு, அவர்கள் எல்லை மீறிப் போய்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப் போனால் அவர்களுடைய மாநாடு ஜூலை 4ம் தேதி ஒன்று சென்னையிலே நடைபெற்றது அந்த மாநாட்டிற்கு எதிராக எந்த வேலையும் நாங்கள் செய்யவில்லை இன்னும் சொல்லப் போனால் எங்களிடம் சிலர் கேட்டபோது கூட அவர்கள் நடத்தினால் நல்லவிதமாக நடத்தட்டும் என்றுதான் சொன்னோம். மறைமுகமாகக் கூட நாங்கள் தொந்தரவு செய்யவில்லை. சகோதரர் பி.ஜே. அவர்களே ஆன்லைன் பி.ஜே.யில் குறிப்பிட்டிருந்தார்கள் என்று உங்களுகே தெரியும் அந்த அளவுக்கு செயல்பாடுகளில் எங்களது கன்னியத்தை செயல்படுத்தினோம்.

இன்னும் சொல்லப் போனால் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஒரு பத்து நாட்களில் சகோதரர் பி.ஜே.அவர்களை கொலை செய்வதற்காக ஒரு செயல் திட்டம் ரகசியமாக முன்னிருத்தப்பட்டது அந்தச் செய்தி எங்களுக்குத் தெரிய வந்த பிறகு உடணடியாக பி.ஜே.அவர்களுக்கு தெரியப்படுத்தி உரிய பாதுகாப்புகளை செய்ய வேண்டும் என்று சொல்லி நானும் எனது தாய் கழகத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்களும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைமை நிர்வாக குழு அறிவுறுத்தலின் அடிப்படியில் அன்றே உளவுத்துறை ஐஜியாக இருந்த சகோதரர் ஈஸ்வர மூர்த்தியை நேரில் சந்தித்து பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்றும் சொன்னோம். காரணம் என்னவென்று கேட்கும்போது எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இதுபோன்ற வன்முறைகளை பயங்கரவாதங்களை ஒருபோதும் யாரும் யார்மீதும் ஏவிவிடக் கூடாது என்று உறுதியாக இருக்கிறோம். நீங்கள் அவருக்குரிய பாதுகாப்பை கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டோம். அந்த நேரத்திலே சகோதரர் பி.ஜே அவர்கள் பாக்கருடன் இருந்தார்கள் எங்களுடைய பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள், பாக்கர் அவர்களை தொடர்பு கொண்டு பி.ஜே.அவர்களுக்கு பாதுகாப்பை கொடுங்கள் அவர் வழக்கமாக இருக்குமிடத்தில் இருக்காமல் வேறு இடத்தில் இருக்க வையுங்கள் என்றும் அறிவுறுத்தினோம். அப்படியெல்லம் நாங்கள் எங்கள் நல்ல எண்ணத்திலே பல்வேறு கால கட்டங்களிலே நெருங்கியிருக்கிறோம்.

இன்னும் சொல்லப் போனால் 2004ம் வருடம் என்று நினைக்கிறேன் கும்பகோனத்தில் அவர் ஒரு மாநாடு நடத்தியபோது பத்திரிக்கையலே ஊடகத்துறையிலே அந்த அமைப்பைச் சேர்ந்த எ.எஸ்.அலாவுதீன், எம்.ஐ. சுலைமான் என்பவர்களின் பெயராலே வெடிகுண்டு கடிதங்கள் வந்தது. இதைப் பற்றி கூட எங்களது பத்திரிக்கையிலே அந்த அமைப்புக்கும் எங்களுக்கும் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் இத்தகைய பங்கரவாத வன்முறையெல்லாம் செய்ய மாட்டார்கள் என்று உறுதிபட எங்களது மக்கள் உரிமையிலே தெரிவித்தோம். இப்படியாக பல்வேறு காலகட்டங்கள் எங்களது நல்ல எண்ணங்களை அவர்களிடம் தெரிவித்து வந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் கடந்த ரமளானிலே ஆன்லைனில் இணையதளத்திலே சகோதரர் பி.ஜே.அவர்கள் அவருடைய உயிருக்கு ஆபத்து என்று கூறி அதற்கு த.மு.மு.க.வில் உள்ள்ச் பலரும் உடந்தை என்பது போல எழுதியது மிகப் பெரிய கோபத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. நாங்கள் எங்களது வேலையப் பார்த்துச் சென்று கொண்டிருந்த தருணங்களில் வீண் பழிகள் போட்டு கொந்தளிப்பான சூழலை உருவாக்க சகோதரர் பி.ஜே.செய்தார்கள்.

அடுத்து திருவிடச்சேரி சம்பவத்திலே அவர்கள் நடந்து விதமும் அதன் பின்னால் அளித்த தன்னிலை விளக்கவும் சமுதாய மக்களிடையே பெரிய கொந்தளிப்பைதான் ஏற்படுத்தியது. அன்றை நிலையில் எங்களது மாற்றுக் கருத்தையும் தெரிவித்தோம் அதைகூட அவர்கள் ஜனநாயகபூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு மோசமான எதிர் எழுத்துத் தாக்குதலையும் செய்தார்கள்.

இப்போது கூட மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் போர்க் கொடி தூக்க சபதம் செய்திருக்கிறார்கள் இத்தகைய நிலையில் அவர்களிடம் எப்படி நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த முடியும் ? நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். கொஞ்ம் கூட நல்லெண்ணமில்லாமல், கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமல், கொஞ்சம் கூட பண்பாடு இல்லாமல் பெருந்தன்மையில்லாமல் குர்ஆன் ஹதீஸ் பேசிக் கொண்டு இப்படிப் பட்ட சமுதயத்தை பிளவுபடுதும் வேலைகளை செய்பவர்களிடம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதில் நம்பிக்கையில்லை, அதனை நாங்கள் தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை சமுதாயமும் விரும்பவில்லை. சமுதாயத்திலுள்ள 99% மக்கள் நம்மோடு இருக்கிறார்கள், அவர்களுடைய ஆதவரவும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ஓரிறைவனின் கிருபையும் எங்களுக்கு இருப்பதாக நம்புகிறோம் அந்த நம்பிக்கையோடு வெற்றிவாகை சூடுவோம், இன்ஷா அல்லாஹ்..


அதிரைநிருபர்: நிறைவாக ஒரு கேள்வி, இதுவரை தமிழக இஸ்லாமிய கட்சிகளிடம் இல்லாத தெளிவும் ம.ம,க.விடம் அப்படி என்னதான் இருக்கிறது ?

தமீமுல் அன்சாரி: எங்களுடைய அரசியலே மாறுபட்டதாகத்தான் இருக்கும், உதாரணத்திற்கு தனிமனித துதிபாடலை முன் வைத்துதான் எல்லா அரசியல் கட்சிகள் செயல்படுது, ஆனால் நாங்கள் ஒரு கூட்டுத் தலைமையை முன்வைத்து செயல்படுகிறோம். தனிநபரின் ஆளுமைகள் வெளிப்படும் அவர்களின் திறன்கள் வெளிப்படும், ஆனால் தனிநபரின் முடிவிலே அல்லது சார்ந்தே எங்களது கட்சி செயல்படுவது இல்லை.

இரண்டாவதாக எங்களிடம் இந்த பணக்காரர்களிடம் மண்டியிடக் கூடிய அரசியலில் நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இப்போதிருக்கும் முஸ்லீம் கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்றால், தங்களுக்கு சீட்டு கிடைத்த உடனே யாராவது கோடீஸ்வரங்க கிட்ட அல்லது கட்சிக்கு தொடர்பில்லாத உறுப்பினரல்லாத, கட்சித் தொடண்டர்களுக்கும் தொடர்பில்லாத ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த தொகுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்று வாருங்கள் என்று சொல்லக் கூடிய சூழலைதான் சமுதாயத்தில் இருக்கிறது.

ஆனால் எங்களுடைய கட்சியில அப்படியெல்லாம் இல்லை குறைந்தது மூன்றாண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும், அவரது உழைப்பை உதாரணத்திற்கு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் அவர் பங்கு பெற்றாரா, சிறைச் சாலைகளுக்குச் சென்றார்களா ? சமுதாய பிரச்சினைகளுக்கு எத்தகைய போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்ற அளவுகோளின் அடிப்படையில்தான் எங்களது வேட்பாளர்களை முடிவு செய்கிறோம்.

மூன்றாவது விசயம் என்னவென்றால் எங்களுடைய கட்சியிலே வேட்பாளர்கள் செலவு செய்ய முடியாது உதாரணத்திற்கு தமிழ்நாட்டிலே மூன்றும் பாண்டிச்சேரியிலே ஒன்றும் நான்கு தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென்றால் போட்டியிடும் வேட்பாளர் ஒரு ருபாயைக் கூட அவரது சொந்தக் காசில் செலவிடக் கூடாது என்பதை எங்களது கட்சியின் கொள்கையாக வைத்திருக்கின்றோம். காரணம் சொந்த காசை செலவு செய்யும் போது அந்த வேட்பாளர் வெற்றி பெற்று வரும்போது தான் செலவு செய்த காசை எடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. பல பேர் ஊழலை ஒழிப்போம் என்று சொல்வார்கள், ஆனால் ஊழலை ஒழிப்பதற்கான அடித்தளத்தையே நாங்கள் சரியாக செய்து திட்டமிட்டு வருகிறோம். அந்த அடிப்படையிலே கட்சி பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி அந்த நிதியிலிருந்துதான் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகள் செய்யப்படும்.

இவைகளெல்லாம் நம் முஸ்லீம் சமுதாயத்திலே ஒரு மாறுபட்ட நல்ல அரசியலாக கருதுகிறோம். அடுத்ததாக இன்றைக்கு பொதுவாகவே அரசியல் என்பது இந்தியாவிலே ஆயிரம் அல்லது ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்ப வலையங்களுக்குள் சுற்றி வரக்கூடிய அரசியலாக சுற்றி வரக்கூடிய சூழலை பார்க்கிறோம். ஒன்று அவர்களிடம் பணம் இருக்க வேண்டும், அல்லது பழைய பாரம்பரியம் இருக்க வேண்டும், அல்லது அரசியலிலே அவர்களது முன்னோர்கள் யாராவது இருந்திருக்க வேண்டும். இப்படிப் பட்ட நிலையில் உள்ள குடும்பங்கள்தான் அரசியலிலே முதன்மைபடுத்தி முன்னிலைக்கு வரக்கூடிய நிலை எல்லா அரசியல் கட்சிகளிடமும் உண்டு அது முஸ்லீம் கட்சிகளிடமும் இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியில் மட்டும்தான் பொருளாதர பின்னனிக்கோ, பாரம்பரிய பின்னனிக்கோ, குடும்ப பின்னனிக்கோ, குடும்ப அரசியல் பின்னனிக்கோ இடமில்லாமல் யாரெல்லாம் சமுதாயத்திற்கா தியாகம் செய்தார்களோ, உழைத்தார்களோ ஆற்றல் இருக்கிறது அறிவு இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை என்ற அடிப்படையிலே வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

இதை எல்லாம் ஒரு மாறுபட்ட நல்ல அரசியல் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் மிக முக்கியமாக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நிறைய வாய்ப்புகளைத் தருகிறோம் பெண்களுக்குரிய மரியாதையை கொடுக்கிறோம் ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய வேலையை செய்கிறோம் அதனுடைய ஒரு அம்சம் தான் தேர்தலிலே நாங்கள் தொகுதிகளைப் பெற்ற பிறகு சமுதாயத்தில் இருக்கக் கூடிய பல்வேறு அமைப்புகளோடு கலந்துரையாடி வருகிறோம் இத்தகைய முன் முயற்சிகளை கடந்த காலங்களில் வேறு எந்த முஸ்லீம் அமைப்புகள் யாரும் செய்யவில்லை என்பதை இந்த நேரத்திலே நினைவூட்ட கடமைபட்டிருக்கிறேன்.

எனவே ஒரு மாறுபட்ட அரசியலை, நல்ல அரசியலை, மனிதநேய அரசியலை முன்னிருத்தி, முஸ்லீம் சமுதாயத்தின் எல்லா சகோதரர்களும் அமைப்புகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து, கட்சி வேறுபாடுகளை மறந்து நான்கு தொகுதிகளிலும் (3+1) நாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த சமுதாயத்தின் பேராதரவை நாங்கள் கேட்கிறோம். குறிப்பாக அதிராம்பட்டினம் என்பது தமிழகத்திலே இருக்கக் கூடிய முஸ்லீம் ஊர்களிலே முதல் ஐந்தில் பிரதானமாக இருக்கக் கூடிய ஊர் மறுப்பதற்கில்லை அதிராம்பட்டினத்து சகோதரர்களை இந்த இணைய தளத்தின் வாயிலாக சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். அதிராம்பட்டினம் சகோதர்கள் உலகமுழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள் தங்களுடைய அந்த வாய்ப்பினை பயன்படுத்தி எங்களுக்கான ஆதரவை தளத்தை அதிகமாக முன்னிருந்த வேண்டும் என்று இந்த அதிரைநிருபர் வலைத்தளத்தின் வாயிலாக நான் தலைமையின் சார்பாக உங்களை கேட்டுக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

-----
இது நம் அதிரைநிருபர் வலைத்தளத்தின் முதல் அதிகாரப்பூர்வமான அரசியல் நேர்கானல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இது முழுக்க முழுக்க அரசியல் உண்மை செய்திகளை அறிந்துக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நேர்கானல். இந்த நேர்கானல் பற்றி உங்கள் அனைவரின் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு நேர்கானலில் சந்திக்கிறோம்.

- அதிரைநிருபர் குழு.

Thursday, March 10, 2011

அமெரிக்காவில் இஸ்லாம்! முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்-அமெரிக்கா அறிவிப்பு !!தொடர் 4


 தீவிரவாதிகளின் செயல்களை ஒடுக்குவதில் அமெரிக்க முஸ்லிம்களின் பங்கு நமக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது என்று வெள்ளை மாளிகை செய்திகள் கூறியுள்ளன.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதத்துக்கு எதிரான தீர்வுக்கு வழி காண்பதில், நமக்கு உதவுவோராக உள்ளனர். எனவே அவர்களால் பிரச்னை இல்லை' என, வெள்ளை மாளிகை பத்திரிகை செயலர் ஜெய் கார்னே கூறியுள்ளார்.
அமெரிக்காவில் முஸ்லிம்களின் தீவிரவாத கருத்துக்கள் தொடர்பாக, கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை காங்கிரஸ் சபை துவக்கியுள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஜெய் கார்னே கூறியதாவது:அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாத கருத்துக்களை எதிர்ப்பவர்களாக உள்ளனர். அதனால், அவர்களின் உதவியுடன் நாம் தீவிரவாத பிரச்னையை எளிதில் களைய முடியும். .தீவிரவாத பிரச்னையில் காங்கிரஸ் சபை அக்கறை காட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம். இது முக்கியமான பிரச்னை என்றும் நம்புகிறோம் என்று ஜெய் கார்னே கூறினார்.
இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், அமெரிக்க முஸ்லிம்கள் உட்பட  ஏராளமானோர் பங்கேற்று தீவிரவாதத்துக்கெதிரான தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Wednesday, March 9, 2011

முஸ்லீம் லீக் கலைப்பு,தி மு கவுடன் இணைந்தது?


//மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப் பாட்டு கோட்பாட்டின் தாரக மந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம்.//

மேற்கண்ட செய்தியினை நம் இணையத்தினை வாசிக்கும் சகோதரர்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டார்கள்!.இனி என்ன செய்யப் போகிறாய்?.... என்ற நம் கட்டுரையில் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்க்கு முன்பே வந்த வாசகம்தான் இது!!. ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம் என்று நாம் அந்தப்பாராவை முடித்திருந்தோம்!. தற்போது அது உண்மையிலேயே வேறுபட்டுவிட்டது!. ஆம்!. அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படுபவரால், “கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்!. 

தன்மானத்தை இழந்து, சுயசின்னத்தில் கூட போட்டியிட முடியாமல், அரசியல் அரங்கில் அனாதையாக இருக்கும் முஸ்லிம்லீகிற்கு இதுவும் வேண்டும்!. இதற்கு மேலும் வேண்டும்!. இதற்கு மேல் வேறு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பதும் எனக்கு தெரியும்!. ஏன் கொடுத்த மூன்று தொகுதியையும் திரும்ப தர வேண்டும் என்று கேட்டால் (பிடுங்கினால்) கூட, சரணம் சரணம் கச்சாமி....! சாமிசரணம் கச்சாமி.....! என்று அதை தாராளமாக வாரி கொடுப்பதற்கு கொடைவள்ளல் காதிர்முகைதீன் தயாராக இருந்திருப்பார்!. அதையே திமுகவும் செய்திருக்கலாம்!. தாழ்த்தப்பட்டோரை விட முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக உள்ளது என்ற நீதிபதி சச்சார் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அரசியல் அரங்கில் காட்சிகள் நிறைவேறிக் கொண்டிருகின்றது!. பொறுத்திருந்து பாருங்கள்!. காதர்முகைதீனிடம் இருந்து கூடிய சீக்கிரமே, சட்டமன்ற மேலவையில் இடம் தருவதாக எங்களுக்கு திமுக வாக்களித்துள்ளது என்று ஓரு டயலாக் வரும்!.

பாருங்கள் சகோதரர்களே!. முப்பத்தி ஒன்று தொகுதியைப்பெற்ற பாமக விடம் ஒன்றை பிடுங்கியதை கூட நியாயப்படுத்திவிடலாம்!. ஆனால் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம்களுக்கு திமுக சார்பில் தரப்பட்ட மூன்றே மூன்று தொகுதியைக்கூட விட்டுவைக்காமல், திரும்ப முஸ்லிம்லீக்கிடம் இருந்து பிடுங்கியது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்கள் மேலும் மேலும் வஞ்சிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்லீக்கிடம் திரும்ப பெற்றதைப் போல், கடந்த தேர்தலில் பெற்ற ஒன்பது தொகுதியைவிட, ஓரு தொகுதியை அதிகம் பெற்ற விடுதலைசிறுத்தைகள் கட்சியிடமோ, முதன்முதலாக கூட்டணியில் சேர்ந்ததுமே, ஏழு இடங்களை பெற்ற கொங்கு முன்னேற்ற கழகத்திடம் இருந்தோ இவ்வாறு பெறமுடியுமா?. முடியவே முடியாது!. அவர்களிடம் திரும்ப பெற்றால், இந்நேரம் அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறி மாற்று அணியில் சேர்ந்திருப்பார்கள். அந்த சமூகம் தங்களின் எதிர்ப்பை காட்டி திமுக விற்கு தேர்தலில் தக்கபாடம் புகட்டி இருப்பார்கள். 

ஆனால் தன்மானம் இழந்த முஸ்லிம்லீக்கிடம் இருந்து மட்டுமே, இதுபோல் திரும்ப பெறமுடியும்!. “இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா" என்று திமுகவிலே கேவலமாக பேசப்படுபவரும், இதற்கு துணை போகியுள்ளவருமான காதர்முகைதீனிடம் இருந்து, முஸ்லிம்லீக் கட்சியின் தலைவர் பதவியை பிடுங்கவேண்டும். இவர் உடனே தூக்கி எறியப்பட வேண்டும்!. சட்டமன்ற இருக்கையில் இடம் பெறாமல், கருணாநிதியின் இதயத்தில் இடம் பெரும் இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரையும், இதுபோன்று சமுதாய நலனை குப்புறதள்ளிய சுயநலவாதிகள் இருக்கும்வரையும், முஸ்லிம்கள் ஒருக்காலும் அரசியல் அரங்கில், தங்களின் பங்களிப்பை பெறமுடியாது!. தற்போது பிறைக்கொடி அம்மனமாக திரிகின்றது!. இந்த துரோகத்திற்கு தானா முஸ்லிம்லீக் கட்சியினர் லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்து கருணாநிதிக்கு விருது கொடுத்தனர்?.

முஸ்லிம்லீக்கின் கடைசி அத்தியாயத்தினை காதர்முகைதீன் அவர்கள் எழுதிவிட்டார். முஸ்லிம்லீக்கை புதைகுழியில் இவர் தள்ளிவிட்டார். இனி முஸ்லிம்லீக் என்ற பெயரை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர். தற்போது இவர்கள் பெற்று இருக்கும் இரண்டு தொகுதிகளில் கூட, நிச்சயம் மமக வை எதிர்த்து நிறுத்தப்படுவார்கள். அதற்கும் முஸ்லிம்லீக் துணைபோய், மேலும் இரண்டு முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்கு செல்வதையும் தடுத்துவிடுவார்கள். இனி அடுத்த சட்டமன்ற தேர்தலில், முஸ்லிம்லீக் என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது என்றே நமக்கு தோன்றுகின்றது. எந்த கோரிக்கையாவது நிறைவேற்றக்கோரி முஸ்லிம்லீக் கட்சி களத்தில் இறங்கி போராட்டம் நடத்தியதுண்டா?. எனவே முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் அடிப்படை உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு, மாற்று கட்சியான மமக வில் சேர்ந்துவிடுங்கள். 

குறைந்தபட்சம் அந்த கட்சியாவது தங்களின் பங்களிப்பை இனி அரசியலில் ஆற்றட்டும்!. அல்லது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை ததஜ களத்தில் இறங்கி நிரப்பட்டும்!. அல்லது பாப்புலர் பிரன்டின் சோசியல் டெமாக்ரடிக் பார்டி அதை நிரப்பட்டும்!. ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!. எவர்களின் இதயத்திலும் எங்களுக்கு இடம் வேண்டாம்!. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களின் இதயத்திற்கு அட்டாக் வந்துவிடலாம்!.

19 கருத்து சொல்ல வாங்க!:


அதிரை அஹ்மது சொன்னது…
உண்மை! துணிச்சலான கருத்துப் பதிவு!
abdul aziz சொன்னது…
காதர் பாய். இதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தொப்பி. சமுதாய மானத்த காப்பாத்துறது இருக்கட்டும் முதல்ல உங்க மானத்த காப்பாத்திக்கங்க. உங்களுக்கு இஸ்லாத்த எதிர்க்கிற ஐயனும், ஐயங்காரும் பரவாயில்லை. கலைஞர் அவர்களே இதிலுமா எங்களை பலிகடா ஆக்கி விடீர்கள் .அது ஏன் கொங்கு கட்சிக்கு கொடுத்ததில் ஒன்றை குறைக்க வேண்டியது தானே,இல்லை என்றால் ராமதாசுக்கு கொடுத்ததில் 2 ஐ குறைக்க வேண்டியது தானே .அதெல்லாம் விட்டு விட்டு முன்று கொடுத்ததில் ஒன்றை புடுங்கி விடீர்களே.மானம் இழந்த முஸ்லிம் லீகு ,முஸ்லிம்களின் பெயரை கேவலப் படுத்ததே.இது தான் தி முக வின் முஸ்லிம் பாசம் .மீண்டும் ஒரு முறை முஸ்லிம்களுக்கு துரோகம் .துரோகிகளையும் துரோகம் இளைடவர்களையும் தோற்கடிப்போம்
அதிரை புதியவன் சொன்னது…
//முஸ்லிம்லீக் கட்சியினர் லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்து கருணாநிதிக்கு விருது கொடுத்தனர்?// யாரு சொன்னது முஸ்லீம் லீக்கு காசுன்னு . அது அவங்க முதலாளி மு.க காசுங்கோ .... பிறகென்ன முதலாளி சொல்ல கேக்காம உங்க சொல்ல கேப்பாரு
AZIFAIR-SIRKALI சொன்னது…
sultan said... அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சரியான கருத்து சகோதரரே! இதயத்தில் மட்டுமே வைத்து நம்மை பார்கும் இந்த கருநானிதி நாய்க்கு நாமும் இதயத்தில் மட்டும் இடம் அளிப்போம் இன்ஷாஅல்லாஹ். அதுமட்டுமல்ல வீக்காகி விக்கிதவிக்கும் இந்த முஸ்லிம்லீகிற்கு விடை கொடுப்போம். த.மு.மு.க தொண்டர்கள் தி.மு.க கொலைவெறிக்கும்பலாள் தாக்கப்படுகிற போது ( என் சடலம் விழுந்தால்தான் இஸ்லாமியர்கள் மீது கை வைக்க முடியும் என்ற கருணாநிதியின் கூலிப்படை கொலைவெறித் தாக்குதல் நடத்தியபோது) அதை வேடிக்கை பார்த்தவன் அந்த கிழட்டுநாய். அவன் அன்றே நம்மை பொருத்தவரை செத்துவிட்டான் இவர்களுக்கு செருப்படி கொடுக்க வாக்கு கேட்டு நம்மிடம் வரும்போது செருப்பால் அடித்து துறத்த நாம் தயங்ககூடாது உடன்படிக்கையில் கையெழுத்து ஆகிவிட்டது 3 தொகுதிகள் என்று இத்தனை லட்சம் முஸ்லிம்கள் வாழும் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட் 2 (ம.ம.க - 3 & முஸ்லிம் லீக் - 2). கிடைத்திருப்பது யானை பசிக்கு சோளப்பொறி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5000 முதல் 15000 வரை ஓட்டுகள் வாங்கும் தே.மு.தி.க வுக்கு 41 சீட்கள் + துணை முதல்வர் + 1 ராஜ்ய சபா உறுப்பினர் என்று இழுத்துக்கொண்டே போகிறது. ஆனால் 25000 முதல் 40000 வரை வாக்காளார்களை கொண்ட நமக்கு, அ.தி.மு.க. சார்பில் 3 + தி.மு.க. சார்பில் 2 சீட்கள். ஏன்? அ.தி.மு.க இல்லை என்றால் தி.மு.க , அதும் இல்லை என்றால் என்ன செய்வது என்ற நம் நினைப்பு தான் காரணம். ஒரு முறை ஓட்டை பிரித்ததற்க்கே விஜயகாந்த் இவ்வளவு கேட்கிறார் நம்மால் பிரிக்க முடியாதா? மறு தேர்தலில் கோரிக்கை வெற்றி பெறாதா ? முடியும் இன்ஷாஅல்லாஹ், இயக்க தலைவர்கள் முன்வரவில்லை. எப்படியும் நம்மிடம்தான் வந்தாகவேண்டும் என்று திராவிட கழகங்கள் நினைக்கக் காரணம் நாம்தான். நமக்கு தெரிந்தது எல்லாம் திராவிட கழகங்கள்தானே. அதை மாற்றினால் போதும், அவர்கள் அழைப்பதர்க்கு முன்னால் நாம்தான் ஓடி விடுகிரோமே. அதை அவர்களும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவறு நம்முடையது சகோதர, சகோதரிகளே. பிறரை சட்டமன்றத்திற்கு அனுப்புவதை நமது தழையாய கடமையாக நினைக்கும் நாம், சட்டமன்ற ஆசை இல்லாமல் இருப்பது எதனால் ? "பார்பவனை எல்லாம் பதவியில் அமர்த்தி விட்டு சிரித்தவை எல்லாம் சிம்மாசனம் ஏற்றி விட்டு ஏதுமற்ற ஏழைகளாய் படிப்பரிவற்ற பாமரராய் வாழ்ந்த்து போதும்" ஏமாறுவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு இறை விசுவாசி இரண்டு முறை கொட்டு படமாட்டான் என்றார்கள். இந்த பொன்மொழியை அறியாததால்தான் நாம் இப்படி இருக்கிறோம். அரசியல்வாதிகள் திண்றுவிட்டு போடும் எலும்புகளுக்கு அடித்து கொள்ளாமல் நாம் திண்றுவிட்டு அவர்களுக்கும் உண்ண கொடுப்போம். நாயாக இருந்து நக்கி பிழைப்பதைவிட, சிங்கமாக கர்ஜித்து சாவது மேல்! வேங்கை
அதிரை அமீன் சொன்னது…
கேவலத்தின் முகவரி மு.லீக் அட, மானங்கெட்டவர்களா! இப்படித்தான் நம் சமுதாய கட்சியினர்களை அழைக்கத் தோன்றுகிறது. நேற்று நடந்து முடிந்த (08.03.2011) அரசியல் நாடகங்கள் மானமுள்ள தமிழக முஸ்லீம்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. மமக என்றொரு கட்சி மூன்றுக்கு மேல் வேண்டாம் என்று ஒரு சாத்தானிடம்; தெரிந்தே சரணடைய, பாரம்பரியமிக்க? மு.லீக் இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என தமிழக முஸ்லீம் சமுதாயத்தையே இன்று முட்டாளாக்கி விட்டது. 2ஜி புகழ் திமுகவின் மிரட்டல் நாடகங்கள் எதுவுமே பாபரி மஸ்ஜித் துரோகிகளான காங்கிரஸிடம் பலிக்காமல் போக, கேட்ட 63 தொகுதிகளை தர வேண்டிய கட்டாயத்தில் முஸ்லீம் லீக்கின் பெயரில் ஒதுக்கிய மூன்றுறுறுறுறுறுறு தொகுதியிலிருந்து ஒன்றை பறித்து காங்கிரஸிடம் தந்துள்ளார் சிறுபான்மை மக்களின் காவலரான? கருணாநிதி, இவரோடு (குவிந்திருக்கின்ற) ஒட்டியிருக்கின்ற நிதியின் எள்முனை அளவு கூட நீதியில்லாதவர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார். நேற்றுப் பிறந்த, கோவை மாவட்டத்தை தாண்டாத ஜாதி கட்சியான கொ.மு.க விற்கு ஒதுக்கிய 7ல் ஒன்றைப் திரும்பப் பெறவோ, வி.சி.க்கு ஒதுக்கிய 10ல் ஒன்றை திரும்பப்பெறவோ திராணியில்லாத கருணாநிதி தன் தைரியத்தை (தமிழக இஸ்லாமிய இயக்கங்களால்) நாதியற்ற சமூகமாக்கப்பட்டு விட்ட இஸ்லாமியர்களிடத்தில் காட்டியுள்ளார், சொந்த சின்னத்தில் நிற்கத்துணியாமல் இரவல் சூரியன் சின்னத்தில் நிற்கும் போதே இந்த நிலைமையென்றால்... நினைக்கவே குமட்டிக் கொண்டு வருகிறது. இந்த அவமானங்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நிற்கின்ற சமுதாய இயக்கங்களால் விளைந்தவினை என அடித்துச் சொல்லுமளவிற்கு கட்சி, இயக்கச் சண்டைகள். சமுதாயம் நலம் நாடி ஓரணியாய் வாருங்கள் என்று எத்தனை கூப்பாடுகள், வந்தீர்களா? உங்கள் அனைவரையும் சரமாரியாக வசைபாட என் மனம் நாடுகிறது இருந்தாலும் அடக்கிக் கொண்டு இன்னும் கெட்டுவிடவில்லை வாருங்கள் ஒன்று சேருவோம், நம்முடைய சகோதர சண்டையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்வோம் இப்போதைக்கு ஒன்றுசேர்ந்து தேர்தலை சந்திப்போம், திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அடுத்த தேர்தலில் நம் சமுதாயத்தின் முன் மண்டியிட வைப்போம், இன்ஷா அல்லாஹ் நம்மால் முடியும், காதில் விழுகிறதா என் சகோதரர்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:8 முஸ்லீம்கள் பாடம் படிக்க நேற்று (08.03.2011) நடந்த இன்னொரு முக்கிய நிகழ்வு, ஏகப்பட்ட சங்கங்களாக செயல்பட்ட அத்தனை நாடார்களும் ஒன்று சேர்ந்து அவர்களின் ஜாதிக்காக ஒரு கட்சியே தொடங்கிவிட்டார்கள், இந்தத் தேர்தலில் போதிய தொகுதிகளை யாரும் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிட்டு தங்களின் பலத்தை காட்டப்போவதாகவும் அறிவித்தும் விட்டார்கள், எல்லாம் நேற்று வரை நாம் யாருமே அறியாத கொ.மு.க.விடம் படித்த பாடம். தானும் கெட்டு சமுதாயத்தின் மானத்தையும் ஏலம் போட்ட முஸ்லீம் லீக்கே உடனே திமுக கூட்டணியை விட்டு வெளியேறு, ம.ம.கவே அதிமுகவை விட்டு வெளியேறு, சோ.டெ.பா.இ கட்சியினர்களே நீங்களும் வாருங்கள் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தை சந்தியுங்கள், இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஓட்டையும் வாங்கிக் கொண்டு சீட்டையும் பறித்துக் கொண்ட (அதாவது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும்) திமுக, பாபரி மஸ்ஜித் விவகார அயோக்கியர்களான காங்கிரஸ், நரவேட்டை காட்டுமிராண்டி கும்பலான பாஜக, கரசேவை காவி நடிகையின் அதிமுக ஆகிய அனைவரையும் சமதூரத்தில் நிறுத்துவோம், இந்த தேர்தலில் இவர்களில் யாருக்கும் முஸ்லீம்களின் ஓட்டில்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம். இஸ்லாமியர்களின் இயக்கங்களே! நமது சமுதாயத்தின் பெயரைச் சொல்லி கட்சி நடத்துவோர் ஒன்றிணைந்து வந்தால் தயவுசெய்து நீங்களும் சமுதாயத்தின் நலன்நாடி இந்த ஒருமுறை மட்டுமாவது உங்களுடைய முந்தைய தீர்மானங்களை வாபஸ் வாங்குங்கள், பிற அமைப்புக்களுடனும் மக்களுடனும் கரம் கோர்க்க முன் வாரீர். தாத்தா ஜெயித்தாலும், செல்வி? ஜெயித்தாலும் முஸ்லீம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை மாறாக இருப்பதை தான் பிடுங்குவார்களே தவிர வேறு எதையும் பிடுங்க மாட்டார்கள் என்பது யாருக்கும் தெரியததல்ல. ஒத்துவராத கட்சிகளையும் இயக்கங்களையும் ஒதுக்குவோம். பெயருக்கு ஆசிரியரான காதர் முகைதீன் ஒன்றை மட்டும் சரியாக செய்கிறார் அது சாமியாராக இருந்தாலும் சரி, மஞ்சள் துண்டு பகுத்தறிவாக இருந்தாலும் சரி யாருக்கும் பேதமில்லாமல் சமமாகவே மண்டியிடுகிறார், த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பு. (தனி நபர் தக்குதல் இன்றியே எழுத நினைத்தேன், இவருடைய இழிசெயலால் முடியவில்லை மன்னியுங்கள் சகோதரர்களே) கட்சிகளே, இயக்கங்களே! தெளிவான முடிவெடுக்க இன்னும் நேரமிருக்கிறது, மனமிருக்கிறதா உங்களிடம்? அதிரை அமீன்
தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும், அனைத்து முஸ்லீம்களின் மனதில் உள்ள உண்மையை செல்லிவிட்டீர்கள் சகோதரர் முஜீப். உண்மை என்று என்று தெரிந்தும் வெளியில் சொல்லாத மனசாட்சியுள்ள முஸ்லீம் இனியாவது சிந்திக்க வேண்டும். வாங்கிகளில் அடகு வைத்து பணம் கிடைப்பது போல் தான் இதுவும் என்று சொன்னால் தகும்.பணம் வாங்குகிறார்களே இல்லையோ இரும்புக்கோட்டை கிழட்டு சிங்கத்தின் இதயத்தில் மட்டும் இடம் கிடைக்கிறது என்ற திருப்தி இவர்களுக்கு காலம் காலமாக. இவர்கள் இரண்டு சீட்டுக்காக மானத்தை அடகு வைத்துள்ளார்கள், ஒரு சிலரோ கொள்கை வேறுபாடு மட்டும் உள்ள சக முஸ்லீமை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் ஒட்டுமொத்த சமுதாயத்தை அடகு வைக்க முயல்கிறார்கள். இன்று வந்த மமகவால் 3 தொகுதிகள் வாங்க முடிந்தது, 50 வருடத்துக்கு மேல் உள்ள இவர்களால் இரண்டு தொகுதிகளே வாங்க முடிந்தது என்றால், இது வேதனையே. இனியாவது ரோசத்தை காட்டுங்களேன்.
தாஜுதீன் சொன்னது…
மர்ஹூம் அப்துஸ்ஸமது சாஹிப், மர்ஹூம் அப்துல்லத்தீப் சாஹிப் இவர்கள் இருவரின் நினைவாக இந்த இரண்டு சீட்டுக்கள். தலைவர் காதர் மொய்தீன் இறந்த பிறகு 3 வது சீட்டு இவர் நினைவாக தந்தாலும் தருவாங்க நம்மை இதயத்தில் வைத்துள்ளவர்கள். முஸ்லீம்களை அவமானப்படுத்தியுள்ள 2சீ ஊழல்.
அபு ஆதில் சொன்னது…
“கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்
அபுஇபுறாஹீம் சொன்னது…
அன்பின் முஜீப் : தலை(வலி) வெட்டி ஒட்டிச் சேர்த்திருக்கும் படத்தினை தூக்கிடவும் இதுவல்ல நம் வழி... உள்ளதைச் சொல்கிறோம் உண்மையை மட்டுமே காண்பிப்போம் !
ஸாலிஹ் சொன்னது…
இன்னும்மா நம்மல முஸ்லிம்கள் நம்புறாங்க! - கருணாநிதி
Shameed சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும் அம்மணம இருந்த காதர்முகைதீனுக்கு கோமலத்துண்டு கிடைத்தது அதையும் தானம் கொடுத்துட்டார்!
abdul சொன்னது…
alhamdulillah thangalin indha samudhaya sindanaiulla karuthai kandu poorippadaindhen insha allah koodiy viraivil muslimgal inakkamaga seyalpattal oru samudhaya puratchiku vithidalaam adirai abdul kareem
இறை நேசன் சொன்னது…
திராவிட கட்சிகளின் குத்தகை ஆட்சி இந்தத் தேர்தலோடுத் தமிழகத்தில் மலையேறும்! குனியக் குனியக் குட்டுப்பட்ட முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் நன்றாக வீறுகொண்டு எழுந்து விட்டது. இன்றைய இளைஞர்களிடம் இருக்கும் இந்த விழிப்புணர்வு, நாளைத் தமிழக அரசியலை அசைத்துப் பார்க்கும். அதற்கு - மானங்கெட்ட தமிழக முஸ்லிம் இயக்க/கட்சித் தலைமைகள் மட்டும் வழிவிட்டு ஒதுங்கினால் போதும்! ஒன்று - ஒன்றுபட வேண்டும்! இல்லையேல் - மானங்கெட்டத் தலைமைகள் ஒதுங்கி வழிவிட வேண்டும்! இந்த இரண்டு மட்டுமே ஆஃப்சன்! இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யவில்லையேல், இளைஞர்கள் தீர்மானிப்பார்கள் இயக்க/கட்சிகளின் முடிவை!
பெயரில்லா சொன்னது…
அடுத்தவங்களை குறை சொன்னவங்களே!அஸ்ஸலாமு அலைக்கும்! ஏன் சாரே!முஸ்லிம் லீக் அல்லது தமுமுக/மமக யாரோடும் கூட்டி சேராம தமிழ்நாடு முழுக்க தனித்து போட்டியிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மேற்படி கட்சிக்கு ஓட்டுபோடுவீங்களா சாரே? ஓட்டுன்னா ஒன்னு கருனாநிதி அல்லது எம.ஜி.ஆர்க்குதான்னு (இப்போ அம்மா)குத்துனீங்க சாரே.தப்பயெல்லாம் நம்ப கிட்ட வச்சுக்கிட்டு அவங்கள குறை சொல்லலாமா? சாரே. பாருங்க பா.ம.க.,விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு அவங்க ஜாதிக்காரங்க ஓட்டுபோட்டு 10 சீட்டு 20 சீட்டுன்னு பேரம் பேசி வாங்குற மாதிரி நாமெல்லாம் ஒற்றுமையா ஓட்டுபோட்டிருந்தா குறைந்தது 50 சீட்டாவது வாங்க முடியாதா சாரே. அடுத்தவங்களை குறை சொல்லியே நாசமா போறது நம்ப சமுதாயம்தான் சாரே. இனியாவது முழிச்சிக்குங்க சாரே. இல்லேன்னா அடுத்த தேர்தல்ல 1 வாங்குறதும் கஷ்டமாயிடும் சாரே.
Anvar சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை முஜீபின் அதிரடியான கட்டுரை. ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன். ஏற்கனவே புதைக்கப்பட்ட முஸ்லீம் லீகை, மறுபடி தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்து, மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று எழுதினால் சரியாக இருந்திருக்கும். சகோ. அன்வர்தீன்
அபூ சுஹைமா சொன்னது…
அன்புச் சகோ. முஜீப், அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் படத்திற்கு காதிர் முகைதீன் பலமுறை விளக்கங்கள் கூறிய பின்னும் அதனைத் தொடர்ந்து இடம் பெறச் செய்வது எந்த அடிப்படையில் நியாயம் என்றும் எனக்குத் தெரியவில்லை. "சாமியாரைச் சந்தித்துவிட்டு இயலாமையின் காரணமாக கையை ஊன்றி எழும்போது, அதற்காகவென காத்திருந்தது போன்று தினமலர் எடுத்த ஃபோட்டோ அது. மற்றபடி அந்தச் சாமியாரிடம் நான் ஆசிர்வாதம் எல்லாம் வாங்கவில்லை" என்று காதிர் முகைதீன் கூறிய விளக்கங்கள் பல குழுமங்களிலும் வெளியானது. சம்பந்தப்பட்டவர் இப்படி ஒரு விளக்கத்தை கூறிவிட்ட நிலையில் இப்பிரச்சனையில் இதற்கு மேல் கருத்து கூற அடியார்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறானா என எனக்குத் தெரியவில்லை. அவரது உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ். மனிதர்களின் தீமைகளுக்காக அவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் அவனுக்கே உரியது. அடியார்களுக்கு இல்லை.
அதிரை முஜீப் சொன்னது…
அபூ சுஹைமா அவர்களுக்கு வ அலைக்கும்வஸ்ஸலாம். தங்களுக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும். இங்கு வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தினை பற்றி தங்களின் கருத்தினை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த புகைபடத்தை இங்கு வெளியிட்டு இவர் சாமியாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றார் என்று நாம் எங்குமே நம் கட்டுரையில் கூறவில்லை. இந்த கட்டுரையும் அதற்க்கானதல்ல! மாறாக இவர் எப்படியெல்லாம் அரசியல் வாதிகளின் இழுதடிப்புக்கு எல்லாம் வளைந்துகொடுகின்றார் என்று ஒப்பிட்டு கூறுவதற்க்கேயாகும். சமுதாயத்தின் பிரதிநிதிகளை அதிகரிக்க செய்ய தனக்கு இருக்கும் பாரம்பரியமிக்க அரசியல் கட்சியின் தலைவர் என்ற ஓரு அதிகாரத்தினை பயன்படுத்தி தங்களிடம் இருந்து மீண்டும் சீட்டினை பெற்றதற்கு ஓரு கண்டனம் கூட தெரிவிக்காமல் விட்டுகொடுக்கின்றார் என்று கூறுவதற்கே ஆகும். மூன்று சீட்டுகள் என்றபோதும் இது எங்களின் சதவிகிதத்திற்கு ஏற்றாற்போல் இல்லை என்று ஓரு வார்த்தைகூட இவரிடம் இருந்து வெளியாகவில்லை!. அமைதியாக இருந்தார். இதை கூட அன்று ஓரு நாளிதழில் ஒருவர் " மூன்று சீட்டு, அதுவும் திமுக சின்னம் என்று நாம் கூறியபின்னும், இவரிடமிருந்து எந்தவித ரீயாக்சனும் இல்லையே!, அப்படியே ஒத்துக்கொன்டாரே!. ஒருவேளை நாம்தான் சீட்டை அதிகமாக கொடுத்துவிட்டோமோ" என்று கருணாநிதி கூறுவதுபோல் ஓரு கமென்ட் வந்தது. அன்று இவர் இவ்வாறு அழுத்தமாக கூறி இருந்தாரேயானால், இன்று இவரிடம் இருந்து பிடுங்குவதற்கு பதில் திமுக வேறு கட்சிகளிடம் இருந்து பிடுங்கி இருக்கும். ஓரு சந்தேகம்: இவர் சாமியாரை அவரின் பூஜை அறைக்கே சென்று சந்திக்க வேண்டிய அப்படி என்ன அவசியம் என்றும் நமக்கு தெரியவில்லை!.
masfa சொன்னது…
keralavil balamulla muslim leaque tamilnaatil paritaba nilayil irkaum entha arasiyal katchihal matikamal irukaum namil otrumai illatathu thaan kaaranam
'ஒருவனின்' அடிமை சொன்னது…
நல்ல கட்டுரை.என் தளத்திலும் நன்றியோடு மீள்பதிவு செய்துள்ளேன்,நன்றி

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!