Thursday, October 7, 2010

.இலஞ்சவாதிகளை காட்டிக்கொடுக்க வேண்டுமா?

பெங்களூரில் ஜனகிரஹா என்கிற, வணிக நோக்கற்ற சமூகநல அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு சமூகத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. 
அதிகரித்து வரும் இலஞ்சம், கையூட்டு போன்ற குற்றங்களுக்கெதிராக இந்த அமைப்பு அண்மையில் ஒரு புதிய வழிமுறையை, அதாவது இணையத்தைத் திறந்துள்ளது.

அந்த இணையத்தின் முகவரி www.ipaidabribe.com ஆகும். இந்த இணையத்தில் சென்று கையூட்டு அளித்துக் கசந்த அனுபவங்களையோ, கையூட்ட மறுத்த வீரத்தையோ, அதனால் வஞ்சிக்கப்படும் சோகத்தை (அ) அவலத்தையோ, அதுவுமில்லாவிட்டால் இந்த வஞ்சகமிக்க இலஞ்சாதிகார வர்க்கத்தின் மீதான கோபத்தையோ கொட்டி வைக்கலாம். நீங்கள் தனிநபர் அல்ல என்று தெரிவிக்கிற இந்த இணையதளம், உங்களுடன் இணைந்து, இலஞ்ச ஊழலுக்கெதிராகப் போராடி, கையூட்டும் சதிகாரத்துக்கு கைபூட்டு போடவைக்கும் என்று தெரிவிக்கிறது.

இந்த இலஞ்சம் என்கிற சமூக பூதத்தை ஒழிப்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ள இணையதளம் தனிநபர்கள் குறிவைக்கப்படமாட்டார்கள் என்று உறுதி கூறுகிறது.

இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தன்று பணியாற்றத் தொடங்கிய இந்த இணையதளம், இதுவரை 130 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 10 முதல் 12 வரையிலான தன்னார்வத் தொண்டு இளைஞர்களே இதில் பங்கெடுத்துள்ளனராம்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!