Sunday, April 25, 2010

அமெரிக்காவில் இஸ்லாம்! முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாடுஅதிபர் ஒபாமா ஏற்பாடு !! தொடர் 2

உலகின் 5 கண்டங்களைச் சேர்ந்த 55 நாடுகளுக்கும் மேற்பட்ட 275 மிகப்பெரிய முஸ்லிம் தொழிலதிபர்கள் பங்கேற்கும் 2 நாள் உலக மாநாட்டை அமெரிக்கா அடுத்த வாரம் நடத்துகிறது. 

அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம்களை மட்டும் அழைத்து நடத்தும் முதல் தொழில் முனைவோர் மாநாடு இதுதான்.

இந்த மாநாட்டை அதிபர் பராக் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கிறார். முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசு மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பது முதல் நோக்கமாக இருந்தாலும் உலகின் முன்னணி முஸ்லிம் தொழிலதிபர்களுடன் அமெரிக்கா நேரடியாகத் தொடர்பு கொண்டால் அது வாணிபம் பெருக மிகுந்த உதவியாக இருக்கும், அதன் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் வருவாயும் பெருகும் என்பவை பிற நோக்கங்களாகும்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் பேசவிருக்கிறார்கள். அடுத்த முஸ்லிம் தொழிலதிபர்களின் கருத்துகளையும் இருவரும் கேட்பார்கள். ராணுவத் தகவல் தொடர்புக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் இந்த மாநாட்டு ஏற்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார். முஸ்லிம் நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவு அவசியம் என்று அமெரிக்க அரசு கருதுவதாக சர்வதேச வர்த்தகத்துக்கான துணைச் செயலர் பிரான்சிஸ்கோ சாஞ்சஸ் தெரிவிக்கிறார். 

2008-ம் ஆண்டில் முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 16 லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்று சாஞ்சஸ் தெரிவிக்கிறார். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுமுகமான நல்லுறவு ஆகியவற்றுக்கு இந்த மாநாடு பெரிதும் உதவும் என்பதால் அமெரிக்கா இதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறது என்பது மாநாட்டுக்கான ஏற்பாடுகளிலிருந்து அறிய முடிகிறது.

இனி--------

இன்ஷா அல்லாஹ்,

அடுத்த பதிவில்.... 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!