Monday, May 30, 2011

தலைகாட்டாமல் இருந்தால் ?

ஒரு நாளில் சில நிமிடங்களாவது வெயிலில் தலை காட்டாவிட்டால், வைட்டமின் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.மும்பையில் வசிப்பவர் குல்கர்னி. ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் இவர், காலையில் அலுவலகம் செல்லும் போது, "ஏசி' காரில் சென்று விடுவார். அலுவலகத்திலும், "ஏசி' அறையிலேயே இருப்பார்.

காலை முதல் மாலை வரை வெளியில் எங்கும் செல்லாமல், வெயிலில் தலை காட்டாமல் இருந்ததால், அவருக்கு சில வகையான வைட்டமின்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். "உங்களின் வழக்கமான பணிகளில் மாற்றத்தை உண்டாக்குங்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம், சில நிமிடங்களாவது உடம்பில் வெயில்படும்படி பார்த்துக் கொள்ளுங்கள்' என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.இதேபோல், "வெயில் படாமல் நிழலிலேயே இருக்கும் பலரும், உடம்பில் முக்கியமான வைட்டமின்கள் பற்றாக்குறையால், சில வகையான நோய் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுகின்றனர்' என, அரசு சாரா அமைப்பு ஒன்றின் துணைத் தலைவராக இருக்கும் டாக்டர் ஷியாம் பிங்கிள் தெரிவித்துள்ளார்.

டி அல்லது டி3 சத்துக்கள் : அவர் மேலும் கூறியதாவது:நாம் வெப்ப மண்டல நாட்டில் வசிக்கிறோம். இங்கு சூரிய வெளிச் சத்திற்கு பற்றாக்குறை இல்லை. இருந்தாலும், பலர் சூரிய ஒளி மூலம் பெறக்கூடிய வைட்டமின்களான, டி அல்லது டி3 பற் றாக்குறையால் அவதிப்படுகின்றனர். அதற்கு காரணம் வெயிலில் தலை காட்டாததே. ஒருவருக்கு எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் எனில், இந்த வைட்டமின் டி அல்லது டி3 சத்துக்கள் அவசியம். மும்பையில் பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின், 75 சதவீதம் பேர் வைட்டமின் சத்துக்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வைட்டமின் பி12 மற்றும் டி சத்துக்கள் அவர்களின் ரத் தத்தில் போதிய அளவு இல்லை. அதனால், உணவுப் பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண் டும். அத்துடன், ஒரு நாளில் சில நிமிடங்களாவது உடம் பில் வெயில் படும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, காலை நேர வெயில் உடம்பில் பட்டால் நல்லது.இவ்வாறு ஷியாம் பிங்கிள் தெரிவித்துள்ளார்.இதே போன்ற கருத்தை, வேறு பல மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.



Sunday, May 29, 2011

மாணவர்களே! சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.


கல்லூரி மாணவர்களுக்கான‌ உதவித் தொகைகள்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை/அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 10 வகையான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன‌.

மாணவிகளுக்கு: முதுநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50,000-க்கு மிகாமல் இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விவசாயிகள் பிள்ளைகள்: இத்திட்டத்தின் கீழ், இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,750 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற, சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை ஆவணத்துடன் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குந‌ர்களுக்கு எழுதி அனுப்பவேண்டும். இவர்களின் அலுவலகங்கள் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ளன.

படை வீரர்களின் பிள்ளைகள்: பாதுகாப்புப் படை வீரர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குன‌ருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம். முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், அனைத்து வகையான பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். பணிக் காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான திட்டத்தின் கீழ், இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இரண்டு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு, விடுதிச் செலவுகளும் வழங்கப்படுகின்றன. இவை கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர்களின் பிள்ளைகள்: முதுநிலைப் பட்டப் படிப்புகள், எம்.பில்., பி.எச்டி. படிக்கும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுதி அனுப்பி உதவித் தொகையைப் பெறலாம்.

வகுப்பு வாரியாக: இது தவிர, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் மூலம், அந்தந்த நலத்துறைகளின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் கீழ் உதவித்தொகைப் பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ஒரே பெண் குழந்தை: தவிர, குடும்பத்தின் முதல் பட்டதாரி/ஒரே ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையைப் பெற சேப்பாக்கத்தில் உள்ள பி.சி./எம்.பி.சி. நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், ஒரு மாணவர் ஒரு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மட்டுமே பெற முடியும். இது தொடர்பாக மேலும் விவரங்களை அறியவும், உதவித் தொகைகளைப் பெறுவதில் ஏதேனும் பிரச்ச‌னை இருந்தாலோ அது குறித்து ஆலோசனைப் பெறவும்,

தொலைபேசி எண்கள்: 044 -28271911/6792/28212090 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இலவசக் கல்வி:

குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும்போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை சென்ற கல்வியாண்டில் பிறப்பிக்கப்பட்டது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்விப் படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்' என சென்ற வருடம் ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ/மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் ஏற்கனவே சேர்ந்து படித்துவரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களைச் சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்கவேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெறவேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்த‌து.

குறிப்பு: மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இவை அனைத்தும் பத்திரிக்கைச் செய்திகளிலிருந்து சேகரித்து தொகுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் உள்ள இந்த தகவல்களைப் பார்க்க முடியாத/அறிய வாய்ப்பில்லாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு, அவரவர்களுக்கு முடிந்தவரை இந்தச் செய்திகளை கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
http://payanikkumpaathai.blogspot.com/2011/05/blog-post_14.html

Tuesday, May 24, 2011

இட ஒதுக்கீடு அதிகரிப்பு - அரசு நடவடிக்கை


தமிழகத்திலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 3,049 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.


அரசின் மானியம் பெற்று ஆண்டுதோறும் ஹஜ் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான, குலுக்கல் சென்னை, ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா குலுக்கலைத் துவக்கி வைத்தார். இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். அரசு செயலர் சந்தானம், சிறுபான்மையினர் நலத்துறை உறுப்பினர் செயலர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹஜ் பயணம் செல்ல ஏழு குழந்தைகள் உட்பட, 10 ஆயிரத்து 465 பேர் விண்ணப்பித்து இருந்தனர். குலுக்கலில் 3,049 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், 70 வயதுக்குப் மேற்பட்டோர், ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்து மூன்று ஆண்டுகளாகக் காத்திருப்பவர்கள் என 981 பேர் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுக்கு மாநில அளவிலான காத்திருப்போர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டோர் விவரத்தை www.hajcommittee.com மற்றும் www.hajjtn.org ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மதுரையிலிருந்து நேரடி விமானம்: இந்த ஆண்டு முதல் மதுரையிலிருந்து ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக, இந்திய ஹஜ் குழு துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியது: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து விமானத்தில் செல்வதால் ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, மதுரையிலிருந்து நேரடியாகச் செல்ல விமான சேவை துவங்கப்பட உள்ளது. இதேபோல், ஆந்திர மாநிலம் ராய்ப்பூரிலிருந்தும் ஹஜ் செல்ல, நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. உடமைகளைக் கொண்டு செல்வதற்கு, ஹஜ் குழு இலவசமாக பெட்டிகளை வழங்குகிறது. புதுச்சேரி, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் ஹஜ் ஹவுஸ் கட்ட மத்திய அரசு 2 கோடி ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: "ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவதால், தமிழக ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்' என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "தமிழக ஒதுக்கீட்டை அதிகரிக்க முதல்வர் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Monday, May 23, 2011

"கார்பன் கூட்டாளி"

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் பெரிதும் வியந்த பதிவர்களில் ஒருவர் சகோதரர் "கார்பன் கூட்டாளி" அவர்கள். http://carbonfriend.blogspot.com/

அறிவியல் கருத்துக்களை ஆன்மீகத்தோடு சேர்த்து ஆணித்தரமாக விளக்குவதில் வல்லவர் (உயிரியலில் முதுகலை பட்டம் பெற்றவர்). என்னுடைய பரிணாம கட்டுரைக்களுக்கு உறுதுணையாக இருப்பவர். 

அவருடைய தளத்தை பார்க்காதவர்கள், நான் மேலே கொடுத்துள்ள லிங்கை பயன்படுத்தவும். உங்களுக்கு அவருடைய முயற்சிகள் பிடித்திருந்தால் நீங்கள் அறிந்த மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் 

அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி ஆடுதுறை - திருமங்கலக்குடி தஞ்சை மாவட்டம்

BE - Mechanical EngineeringBE - Civil EngineeringBE - Electronics & Communication EngineeringBE - Computer Science EngineeringBE - Electrical and Electronics Engineering

NO DONATION

* அனுபவமிக்க பேராசிரியர்கள்
* சென்னை போன்ற நகர்புற கல்லூரிகளுக்கு இணையான  
தரமான கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் 
* இயற்க்கை எழில்மிக்க காற்றோட்டமான சுற்றுச்சூழல்
* ஆண் பெண் இருபாலாருக்கும் தனி தனி விடுதி வசதிகள்
* இருபாலாருக்கும் தனி தனி தொழுகை கூடங்கள்
* அருகில் உள்ள ஊர்களுக்கு வாகன வசதிகள்
* மாணவர்களுக்கு கூடுதலாக நல்லொழுக்க பயிற்சி 
மற்றும் Spoken Englishவகுப்புகள்
* விளையாட்டில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை புரியும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு சலுகைகள் 

* தரமான மற்றும் சுகாதாரமான உணவகம்
* மற்றும் பல
-- 

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:ஷாஜஹான் - 9965904553
காரல் மார்க்ஸ் - 9965904550
மெஹ்பூப் - 9894987984
Office: 0435- 2473355, 2473354,2472444,2470444
Website: www.as-salamcollege.com
Email: ascet.aduthurai@gmail.com

Sunday, May 22, 2011

மரண அறிவிப்பு.

புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அமைச்சரவையின் ஒரே முஸ்லிம் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் கார் விபத்தில் மரணமடைந்தார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.


 திருச்சி பெரம்பலூர் மெயின்ரோடு, பாடாலூர் அருகே அவரது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அவரது கார் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.இந்த விபத்தில் மரியம் பிச்சை மரணம் அடைந்தார். 

Wednesday, May 18, 2011

விழித்துக்கொண்ட முஸ்லிம்கள், அலறும் அரசியல் கட்சிகள்

அசாம் மற்றும் கேரளா சட்டசபை தேர்தலில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் முஸ்லிம் மக்கள், மதம் சார்ந்த கட்சிக்கு இம்முறை ஓட்டளித்திருப்பது, முன்பு எப்போதும் நடக்காதது என்று, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில், மவுலானா பத்ருதின் அஜ்மல் குவாஸ்மி தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, 75 இடங்களில் தனித்து போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில், குனாலிகுட்டி தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 24 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவிற்கு, அதிக இடங்களில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், இக்கட்சிகள், அதிகாரம் படைத்த கட்சிகளாக, இம்முறை உருவெடுத்துள்ளன.


முஸ்லிம் சமுதாய கட்சிக்கு, அந்த சமுதாயத்தினரின் ஓட்டு என்ற நிலை உருவாகியுள்ளது. அசாமில் முஸ்லிம்கள் 30 சதவீதமும், கேரளாவில் 25 சதவீதமும் உள்ளனர். வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து, இச்சமுதாய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும், இக்கட்சி தலைவர்கள், அதிகளவில் கவனம் செலுத்தி உள்ளனர்.இந்த மாநிலங்களுக்கு மாறாக, மேற்குவங்கத்தில், எப்போதும், இடது சாரி கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்த முஸ்லிம்கள், சமீபத்திய தேர்தலில், திரிணமுல் தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டுகளை அளித்துள்ளனர். அதேசமயம், அசாம் மற்றும் கேரளா தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, அதிகளவில் விளம்பரம் செய்தால், இந்த மாநிலங்கள், தவறான முன் உதாரணங்களாக மாறிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பீகார் மாநிலத்திலும், முஸ்லிம்கள் அதிகம். கடந்தாண்டில், அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஓட்டுகள் அனைத்தும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பக்கம் சாய்ந்தன. இதே நிலைமை தான் இம்முறை மேற்குவங்கத்திலும் பிரதிபலித்துள்ளது.



அதேபோன்று தமிழகத்திலும் முஸ்லிம்களின் பாரம்பரியமான் திமுக ஒட்டு வங்கியை மனித நேய மக்கள் கட்சி உடைத்து,அதிமுக அணிக்கு பெற்றுத்தந்ததால் திமுக தோற்றுப்போனது என்ற திமுகவின் புலம்பலும் கவனிக்கத் தக்கது.

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்பதை முஸ்லிம்கள் இந்திய அளவில் நன்கு உணரத்தொடங்கியுள்ளனர்.இது ஒரு நல்ல முன்னேற்றம்.

Tuesday, May 17, 2011

வரும் 24ம் தேதி ஹஜ் குலுக்கல்

 தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள, 10 ஆயிரத்து 470 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றுக்கான குலுக்கல், வரும் 24ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு ஹஜ் கமிட்டியிடம், இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள, 10 ஆயிரத்து 470 பெரியவர்கள் மற்றும் ஏழு கைக்குழந்தைகளுக்கு விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்து, ஹஜ் செல்லும் பயணிகளை தேர்ந்தெடுக்க, வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் உள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கில் நடக்க உள்ளதாக, ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

Sunday, May 15, 2011

செல்லாத ஓட்டு

  “இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை (வாழ்க்கை நெறியை) எவரேனும் விரும்பினால் (அது) ஒரு போதும் அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.” (அல்குர்ஆன் 3:85)

Friday, May 13, 2011

மாமிசம் இலவசம்


ரிக் வேதம் பசு புனிதமானது என்று கூறுகிறது. புனிதமானபடியால் யாகங் களில் அது வாளால் அல்லது கோடரி யால் வெட்டப்பட்டுக் கடவுளுக்கு நெய்வேத்தியமாக அளிக்கப்பட்டது. கடவுள் நெய்வேத்தியத்தைப் பிரசாத மாக பிராமணர்களும் சரி, பிராமணர்கள் அல்லாத ஜாதி இந்துக்களும் சரி பக்தியுடன் சாப்பிட்டனர்.

இதை தைத்தீரிய பிராமணா என்ற வேத நூல் தெளிவாகக் கூறியுள்ளது. இது மட்டுமின்றி, வீட்டிற்கு விருந்தாளி வந்தால் அவருக்கு கோ உணவு அளிக்க வேண்டும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அவ்வாறே விருந்தாளி கள் வேத காலங்களில் கவுரவப் படுத்தப்பட்டனர்.

ஆரியர்களின் ஆகப் பெரிய ரிஷி யாகிய யாஜன வல்கியார் கூறுகிறார்:

நான் அதைச் சாப்பிடுகிறேன். ஆனால், அது இளசாக இருக்க வேண்டும்.

இந்துக்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்ததைப் புத்த சூத்திரங்கள் தெளி வாகக் கூறுகின்றன. பசுக்களும் இதர பிராணிகளும் ஏராளமாகக் கொல்லப் பட்டன. இவை அனைத்தும் சமயச் சடங்குகளாகக் கருதப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய இந்தியாவில் இந்துக்களை மாமிச பட்சிணியாகவும், காய்கறி உணவு உண்பவர்களாகவும் பிரித்தால் மட்டும் போதாது. மாமிசம் உண்ப வர்களை, மாட்டு மாமிசத்தைத் தவிர வேறு மாமிசங்களை உண்பவர்கள் என்றும், மாட்டு மாமிசம் உண்பவர்கள் என்றும் பிரிக்க வேண்டும். உணவு அடிப்படையில் இந்துக்களைப் பிரித்தால் பார்ப்பனர், பார்ப்பனரல் லாதார், துண்டாப்படாதவர் எனலாம். ஆனால், வேதங்கள் கூறும் நான்கு வர்ணங்களுக்கு இது ஒத்துவராது. எனினும், எதார்த்த நிலையை உண்மையில் எடுத்துக் காண்பிக்கின்றது.

ஒரு காலத்தில் எல்லோருமே மாட்டு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பிராமணர் மாட்டு மாமிசத்தை உண்ணுவதை விட்டுவிட்டனர். பிறகு எந்த மாமிசமும் சாப்பிடுவதை விட்டுவிட்டு, காய்கறி உணவு மட்டும் சாப்பிடத் தொடங்கினர். ஆனால், பிராமணர் அல்லாதவர் மாட்டு மாமிசம் சாப்பிடுவதை விட்டனரே தவிர, மீதியுள்ள மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர்.

அஸ்வமேத யாகம் போல், பசு யாகம் செய்த போதெல்ம் பிராமணர் அந்த மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர். உண்மையில் ஏறத்தாழ தினசரி பிராமணர் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பிராமணர் குருமார்கள் ஆன படியால், பிராமணர் அல்லாதார் எல்லாச் சடங்குகளுக்கும் பிராமணர்களை அழைத்து வந்தனர்.

எல்லாச் சடங்குகளி லும் கலந்து கொள் ளும் பிராமணர் களுக்குத் தினசரி இலவச மாகவே மாமிசம் கிடைத்தது. இந்த வசதி பிரா மணர் அல்லாதவர் களுக்கு கிடைக்க வில்லை. உபநிஷத் துக்கள் கோ மாமிசம் சாப்பிடுவதை நியா யப்படுத்தின; கட்டா யப்படுத்தின. அப்படியானால், கோ மாமிசம் சாப்பிடுவதைப் பிராமணர் எப்பொழுது கைவிட்டனர்? ஏன் கைவிட்டனர்? என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

புத்த மதத்திற்கும் பிராமணீயத் திற்கும் ஏறத்தாழ 400 ஆண்டுகள் கடுமையான சண்டைகள் நடைபெற்று வந்தன. புத்தமதம், மக்களை மிகவும் கவர்ந்தது. கடவுள் இல்லை என்பதும் பொருள் முதல்வாதமும் மக்களின் சமயமாக ஆயின. அசோக மன்னனே பவுத்தத்தைப் பெரிதும் ஆதரித்தவன்.

பிராமணர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பெரும் முயற்சி செய்து வந்தனர். பவுத்த மதம் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டதால், அதே மதத்தைப் பிராமணர்களும் கடுமையாக பின்பற்றத் தொடங்கினர். புத்தர் இறந்த பின், பவுத்தர்கள் புத்தக் கோவில்களைக் கட்டினர். பிராம ணர்களும் கோயில்களைக் கட்டினர். ஆனால், அவைகளில் சிவன், விஷ்ணு, இராமர், கிருஷ்ணன் விக்கிரகங்களை வைத்தனர். இதன் நோக்கம் ஒன்றே; புத்தர் கோவில்களுக்குச் செல்லும் மக்களைத் தங்கள் கோவில்களுக்கு ஈர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு தான் கோவில்கள் ஏற்பட்டன. பிராமணீயத்தில் கோவில்கள் கிடையாது.

பவுத்தர்கள், பார்ப்பனர் சமயத்தை எதிர்த்தனர். குறிப்பாக யாகத்தையும், யாகத்தில் குதிரை, பசு முதலியவற்றைக் கொல்வதையும் கடுமையாக எதிர்த்தனர். பசுக் கொலை எதிர்ப்பைப் பெரு வாரியான சாதாரண மக்கள் பெரிதும் வரவேற்றனர். காரணம், விவசாயத் திற்கு மாடுகள் மிகத் தேவையான தாலும் பெருவாரியான மக்கள் விவசாயிகளானபடியாலும், மாட்டைக் கொலை செய்வதை அவர்கள் விரும்பவில்லை. பிராமணர்கள் மீது வெறுப்பு இவ்வாறு அந்தக் காலத்தி லிருந்துதான் ஏற்பட்டது. இதைச் சமாளிக்கும் பொருட்டு பிராமணர்கள் யாகத்தையும், பசுவை யாகத்தில் கொல்வதையும் கைவிட்டனர்.

இது மட்டுமன்றி பவுத்த பிக்குகள் செல்வாக்கிலிருந்து மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கப் புலால் மறுத்து. எந்த மாமிசமும் தின்பவர்கள் அல்லர் என்றும் தாங்கள் காய்கறிகள்தான் உண்பவர்கள் என்றும் வெளிப்படுத்தத் தொடங்கினர். இவ்வாறுதான் மாமிசப் பட்சிணியாக இருந்த பிராமணர்கள் காய்கறி மட்டுமே தின்னும் சாகப் பட்சிணியாகத் தொடங்கினர்.

இது ஒருபுறமிருக்க, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் தின்பது தீண்டாமைக்கு ஏன் இட்டுச் செல்ல வேண்டும்? பிராமணர்களும் பிரா மணர் அல்லாதவர்களும், கோமாமிசம் சாப்பிடுவதை விட்டபின், உடைந்த மனிதர்கள் மட்டும் கோமாமிசம் சாப் பிடுவது புதிய சூழ்நிலையை ஏற்படுத் தியது.

கோமாமிசம் சாப்பிடாதவர்கள், பசு பவித்திரமானது; அதைக் கொல்லக் கூடாது; பசு மாமிசம் சாப்பிடுகிறவர்கள் சண்டாளர்கள் என்று கூறத் தொடங் கினர். அகவே, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் சாப்பிட்டு வந்தால் அவர்கள் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டனர்.

ஆகவே, உடைந்த மனிதர்கள் கோமாமிசம் சாப்பிட்டு வந்த காரணத்தால், தீண்டப்படாதவர்கள் என்ற நிலை ஏற்பட்டது என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

(மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து)

--------- விடுதலை ஞாயிறு மலர், 07-05-2011

Tuesday, May 10, 2011

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிடுவீர்!


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக!

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை, வாத்தியாப் பள்ளித் தெரு, எண் 1, ஃபாத்திமா நகர் முகவரியில் வசிக்கும் திருமதி ஏ.கே. மைமூன் பீவிஅவர்களின் கீற்று வேயப்பட்ட வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.05.2011) நண்பகல் 1:30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று தீப்பிடித்து மளமளவென்று வீடு முழுவதும் பரவியது.
PNO House Fire 08.05.2011 6.jpg
வெறும் சுவர்கள் மற்றும் மண் பாத்திரங்கள் போன்றவற்றை மட்டும் விட்டுவிட்டு வீட்டில் உள்ள பீரோக்கள், அலமாரிகள், கட்டில், மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, எமர்ஜென்சி விளக்கு, மின்விசிறிகள், டேபிள் ஃபேன், ரேடியோ, கிரைண்டர், மிக்ஸி, கதவுகள், ஜன்னல்கள், சுவிட்சு பெட்டிகள், எலெக்ட்ரானிக் மீட்டர், சைக்கிள், டேபிள், நாற்காலிகள், துணிமணிகள், உணவுப் பொருட்கள், கூரை, கீற்று, மூங்கில்கள் என அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் தீ தின்று தீர்த்து விட்டது.

இத்துடன் வீட்டை சரி செய்வதற்காக கடனாக வாங்கி வைத்திருந்த 55,000 ரூபாய் ரொக்கப் பணம், பொருட்கள் வாங்கிக் கொடுப்பதற்காக வைத்திருந்தநான்கு ரேஷன் (குடும்ப) அட்டைகள்குழந்தைகளின் காது நகைகள் (சுமார் 1 பவுன்)என அனைத்தையும் நெருப்பு தின்று விட்டது. 

சிறுகச் சிறுகச் சேமித்து குடும்பத் தேவைக்காக வைத்திருந்த இந்தப் பொருட்களின் மதிப்பு ஏறக்குறை 5 இலட்சத்திற்கும் அதிகம். இதற்கெல்லாம் மேலாக வீட்டில் உள்ளோர் உடுத்தியிருந்த துணிகள் மட்டுமே மிஞ்சியது. மாற்றுத் துணிகள் ஒன்றுகூட இல்லாமல் அனைத்தும் தீயில் கருகிவிட்டது.
PNO House Fire 08.05.2011 1.jpg
கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒரு மகனார், அவரின் மனைவி, இரண்டு சிறு பிள்ளைகள் (ஒரு பெண் பிள்ளை வயது 5 மற்றும் ஒரு ஆண் பிள்ளை வயது 4), ஒரு விதவை மகள் (வயது 40) என ஆறு நபர்களின் உயிர்கள் மட்டுமே இந்த சம்பவத்தில் தப்பித்தவை. 

அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு உறவினர்கள், ஊர்க்காரர்கள் உட்பட பலர் பல விதங்களில் ஆறுதல் சொல்லி தேற்றினாலும் நாளைய வாழ்விற்கு வழித் தெரியாமல் கலங்கி நிற்கிறது அந்த குடும்பம்.

எனவே, இந்தத் தகவலை வேண்டுகோளாக ஏற்று உள்நாட்டிலும், வெளிவாட்டிலும் வாழும் நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள், அமைப்புகள், இயக்கங்கள், அறக்கட்டளைகள், நற்பணி மன்றங்கள், சங்கங்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு பொருளாகவோ, பணமாகவோ அன்பளிப்பாக வழங்கி அந்த ஏழைக் குடும்பத்தின் கண்ணிரை துடைத்திடுமாறும், குடியிருக்க வீடும், குடும்பம் நடத்தத் தேவையான பொருட்களும், உடுத்திக் கொள்ள துணிமணிகளும் வழங்கி அவர்கள் வாழ வழி செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியில் நேரிடையாகவோ அல்லது தொலைபேசி மற்றும் அஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும், இந்தக் குடும்பத்தின் செய்தியை பிறருக்கும் எடுத்துரைத்து அவர்களும் இந்த நற்காரியத்தில் பங்கெடுக்க வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

நன்றி. வஸ்ஸலாம்.

திருமதி ஏ.கே. மைமூன் பீவி
எண் 1, ஃபாத்திமா நகர்,
வாத்தியாப் பள்ளித் தெரு,
பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம். 
அலைபேசி: (+91) 9894342457

வங்கிக் கணக்கு விபரம்:
A/c # : 007101000018803
Bank: Indian Overseas Bank
Branch: Portonovo - 0071
District: Cuddalore

மேலதிக விபரங்களுக்கு...
ஏ.கே. அப்துல் பாரீ (அண்ணன்) (+91) 9003608064
எஸ். அப்துல் ஹமீத் (மச்சான்) (+901) 9944030796
ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் (மகன்) (+91) 8870159878
ஏ. லியாகத் அலீ (தங்கை மகன்) (+91) 9597783844

அன்புடன்,
மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic).
(தற்போது பரங்கிப்பேட்டையில் நிகழ்விடத்திலிருந்து...)

Monday, May 9, 2011

முதல் அடி

அயோத்தி பிரச்னையில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரிப்பதற்கான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.




மேலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு "புதிரானது" என்றும் கருத்து தெரிவித்துள்ளது.


"இடத்தை பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை. இந்நிலையில், எவரும் கோராத வகையில் புதிய தீர்வினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியது ஆச்சரியமாகவும் உள்ளது." என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.



அயோத்தியில் ராம ஜென்ம பூமி அமைந்துள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, நிர்மோகி அகாரா, அகில பாரத இந்து மகா சபா, ஜமாத் உல் அமாஹி ஹிந்த், சன்னி சென்ட்ரல் வஃக் போர்டு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.




இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிப்பதற்கான உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Sunday, May 8, 2011

மரண அறிவிப்பு

புதுமனை தெருவை சேர்ந்த சைபுதீன் s/o  பாரூக் அவர்களின் குழந்தை ஹமூத் (வயது பத்து மாதங்கள்) உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் காலமாகிவிட்டது. 
 
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்.அந்தக் குழந்தையின் பெற்றோரை பொருந்திக்கொண்டு,பாவங்களை மன்னித்து,பொறுமையை கொடுத்து ஈருலகிலும் வெற்றி பெற செய்வானாக.

அந்தக் குழந்தையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் - சுவர்க்கப் பூங்காவில் நுழைய செய்வானாக.ஆமீன்.
 

6:61
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
 
2:155நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

Sunday, April 24, 2011

ஒரு கடவுளின்??? மரணம்..


பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது:
புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 85 . கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.
பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. 

- நன்றி.தினமலர்


முதலில் விமர்சனங்களுக்கும்,அவரது கொள்கைகளுக்கும் அப்பாற்பட்டு, சாய்பாபா என்ற நபர் செய்த பல்வேறு நலத்திட்டங்களை கருத்தில் கொண்டு அவரது இறப்பிற்கு சகமனிதன் என்ற முறையில் எனது இறங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஷயத்துக்கு வருவோம்..இவர் ஒரு சாதாரண மனிதர் என்பதை கடந்து கடவுளாகவும்,கடவுளின் அவதாரமாகவும், பூஜிக்கப்பட்டு,அவரை வணங்கவும், அவரிடம் ஆசிபெறவும்,பெரும் பெரும் தலைவர்கள், அறிவியலாளர்கள் முதற்கொண்டு பலகோடி மக்கள் உலகம் முழுவதிலும் உள்ளனர்.இவரை கடவுளாக ஏற்று வழிபடும் மக்கள் சமீபகாலமாக கடவுள் மரணித்துவிடக்கூடாதென்று பிராத்திக்க ஆரம்பித்துவிட்டிருந்தனர்.கடவுள் உடல்நலக்குறைவு காரணமாக மனிதர்களின் உதவி வேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொடுமை வேறு.இப்படிப்பட்ட பலகீனமான கடவுள்,கடவுள்தானா???... முதலில் தன்னை போன்ற மனிதனை கடவுளாகக் கொண்டாடுவதே அறிவுக்கு பொருந்தாத மூடத்தனம் இல்லையா..

சரி.கடவுளின் வரையறைதான் என்ன?கடவுளை அத்துனை எளிதில் வரையறுத்திட முடியாது...இருந்தாலும் குறைந்தபட்ச தன்மைகளின் படி, கடவுளானவன் முழுமையாக இப்பேரண்டத்தை படைத்து,பரிபாலித்து,மனித மற்றும் இன்னபிற உயிர்களை படைத்து,பாதுகாத்து உணவளித்து, அண்டசராசர இயக்கங்களை தன்வசப்படுத்தி,முக்காலமும் அறிந்து, தனக்கு இணை எதிலும்,யாரும்,எப்போதும், இல்லை என்ற தன்மையுடையவனாய் இருத்தல் வேண்டுமே...அல்லது இவர்களின் குறைந்தபட்ச அறிவானது கடவுளானவன் குறைந்தது பிறப்பு,பிணி,மூப்பு, மரணம் போன்ற ஏதும் அண்டாதவனாகவாவது இருக்கவேண்டுமே..என ஏன் சிந்திக்கவில்லை.

இவர் செய்த சாகசங்கள்,சித்துவிளையாட்டுக்கள் அனைத்தும் யூட்யூபில் குவிந்து கிடக்க,அவர் என்ன செய்தாலும்,எப்படி இருந்தாலும்,அவரின் காலை கழுவி புண்ணியம் தேடிக்கொள்ளலாம் என்று எண்ணும் மூடத்தனத்தை என்ன்வென்று சொல்வது??..இந்த கடவுள்???,உறக்கம்,உணவு,ஓய்வு,கழிவு, வலி, சுத்தம்,நோய்,மருந்து,என அத்துனையிலும் மனித பலகீனத்தை கொண்டவராகவும்,அனைத்தின் மீது தேவையுடையவர்ரகவும் இருக்க,எந்தத் தகுதி இவரை கடவுளாக்கியது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தக் கடவுள்?? பிறர் தேவையை நிறைவேற்றுவது இருக்கட்டும்,இவர் எல்லாக்காலங்களிலும்,தேவையுடையவராகவே இருந்து,கடைசியில் யாருடைய தேவையும் பயனளிக்காமல்,பிறந்து விட்ட ஒவ்வொரு உயிரும் சுவைத்தே தீரவேண்டிய மரணத்தை சுவைத்துவிட்டார்.இனி இவர் பெயரில் இன்னொறு அவதாரம் தயாராகிக் கொண்டிருக்கும்,விரைவில் வெளிவரும்... அதையும்..துக்கி உக்காரவைத்து காலைக்கழுவி நன்மையை பெற்றுக்கொள்ள மக்கள் அலைமோதத்தான் போகிறார்கள்....

மனிதன் எல்லாக்காலத்திலும் தேவை உள்ளவனாகவே இருக்கிறான்.மனிதன் அவ்வாறே படைக்கப்பட்டுள்ளான்.அவனை படைத்ததும் பரிபாலிப்பதும் ஒருவனாக இருக்க...அவனை நிராகரித்துவிட்டு,கண்ணில் கண்டவர்களையெல்லாம் கடவுளாக்கி வண்ங்கி முக்தி பெற்றுவிடலாம் என எண்ணிக்கொண்டிருக்கும் மனிதன்,தான் தவறான முகவரிக்கு மடல் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருக்கிறோம் என்பதை ஒருபோதும் உணர்வதில்லை.

உதாரணமாக கருணாநிதி நமக்கு ஓர் உதவி செய்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம்,அதற்கு நாம் ஒரு கரப்பான் பூச்சிக்கு நன்றி சொல்லிவிட்டு, அவருக்கே நன்றி சொல்லியதாக கருதிக்கொண்டு இருக்க. நாளை அவரை நேரில் சந்திக்கும் போது,அவர் கேட்பாரா மாட்டாரா...என்னப்பா...உனக்கு உதவியவன் நானாக இருக்க நன்றியை எனக்கு அறிவிக்காமல் கரப்பானுக்கு சொல்லி இருக்கிறாயே என்று???

இல்லை இல்லை..என்னால் அப்போது உங்களை நேரில் சந்திக்க முடியாததால்,கரப்பானை நீங்கள் என உருவகித்து அதற்கு நன்றி சொல்லிவிட்டேன்...என்றால்??? எப்படி இருக்கும்..அப்படியா..சரி போ...என விட்டுடுவாரா என்ன...நன்றி சொல்லாவிட்டால் கூட பரவாயில்ல..என்னைய கேவலம் ஒரு கரப்பான் பூச்சியாவா கற்பனை பண்ணுனன்னு கோபப்படுவாரா, மாட்டாரா??போயும் போயும் சக மனிதனாக இருக்கும் கருணாநிதிக்கே தன்னை கரப்பான் பூச்சியாக்கியதை பொருத்துக் கொள்ள முடியாதே... அனைத்தையும் படைத்து,இயக்கி,தனக்கு எப்போதும் யாரிடத்தும், எத்தேவையும் இல்லாத,கடவுளுக்கு,இணையாக எதுவுமே இல்லை என இருக்கும் நிலையில்,அவன் படைத்த மனிதனையும் மனிதனிலும் கெட்ட அற்ப பொருள்களையும் அவனுக்கு இணையாக்கி...படைத்தவனின் திறனை கேலிக்கூத்தாக்குவது அவனுக்கு தகுமானதாக இல்லையே..

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்..கடவுள் நேரடியாக வந்து உதவுவதில்லை..அவர் மக்களுக்கு உதவ,உபதேசிக்க ஒருவரை தன் அவதாரமாக அனுப்பிவைக்கிறார்.அவர் கடவுளின் பிரதிநிதியாக இருப்பதால் அவருக்கு நன்றியை செலுத்திவிடுகிறோம்.அவரிடம் வேண்டியதை கேட்கிறோம். ஏன் முஹம்மது நபி(ஸல்) அவர்களை கடவுளின் தூதராக முஸ்லீம்கள் நம்புவதில்லையா?அப்படித்தான்...

சரிதான்..கடவுள் நேரடியாக வந்து உதவுவதில்லைதான்..எனக்கு கஷ்டம் ஏற்படும்போது,எனக்கருகில் இருக்கும் மனிதனைக்கொண்டுதான் எனக்கு உதவுகிறான்...அதனால் எனக்குதவிய அம்மனிதன் கடவுளாகிவிடுவானா.. உதவிய மனிதனுக்கு எனது நன்றியை தெரிவித்துவிடுவேன்,ஏனெனில் மனிதனுக்கு நன்றி செலுத்தமுடியாதவன் கடவுளுக்கு நன்றி செலுத்துபவனாக இருக்க முடியாதே,....ஆனால் உதவி புரிந்த இறைவனுக்கு முழுமையாக அடிபணிவதே அவனுக்கும்,அவனுடைய அருளுக்கும் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும்.அதுமட்டுமல்லாது,நபி முஹம்மது (ஸல்) அவர்களை முஸ்லீம்கள் ஒருபோதும் இறைவனுக்கு ஒப்பாக்கியதில்லை. அவர்களை நாம் மனிதராகவும் மனிதரில் புனிதராகவுமே பார்க்கிறோம்..நம்மை படைத்த இறைவனின் அந்தஸ்த்து மிகவும் உயர்ந்தது,அதை நாம் எத்தனை முயன்றாலும் முழுமையாக கூறிடமுடியாது.

ஆக இறைவன் இதை இதையெல்லாம் செய்தால் கோபம் கொள்வான்,அவன் இத்தகைய பாவங்களை மன்னிப்பதே இல்லை, தண்டனை உண்டு என்றால்...சிலர் கேட்கிறார்கள்...சரி...இப்படிப்பட்ட உயரிய இறைவன் அன்பிலும் பாசத்திலும் யாவரையும் மிகத்தவனாகத்தானே இருக்கமுடியும்...அப்படி இருக்க...அவன் மனிதன் செய்யும் தவறுகளை மன்னித்து அவன் மீது அன்பு செலுத்துவது தானே சரியாக இருக்கும்.அப்படிப்பட்ட கடவுள் எத்தனை பரிவுடையவனாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு தகப்பன் தான் வாங்கிய புத்தம்புது காரை தன் குழந்தை கீரி நாசப்படுத்திவிட்டால் அவனை தண்டித்துவிடுவானா??? தான் பெற்ற பிள்ளைய தண்டிக்காத மனிதன் தகப்பனாக இருக்கும் போது,..நான் செய்த தவறுக்கு என்னை தண்டிக்காதவன் தான் கடவுளாக இருக்கமுடியும் என வியாகியானம் பேசுகின்றனர்..

சரிதான்,தன் குழந்தை தனது காரை வீணாக்கிவிட்டால் எந்த தகப்பனும், தண்டிப்பதில்லைதான்.அது அறியாதது என அவன் அறிவான்.அதுவே வளர்ந்த முழுமையான அறிவு பெற்ற நல்லது கெட்டது தெரிந்த தன் பிள்ளை செய்தால்,சிறிய தவறாக அது இருந்தாலும், அவனை தண்டிக்காமல் இருப்பதில்லை.சிலர் தண்டிக்காமலும் இருக்கலாம்...

ஆனால் அதே பிள்ளை..நீ என் தகப்பனே இல்லை..நீ என்னை பெறவே இல்லை.என சொன்னாலும் பரவாயில்லை..இன்னொருவனை தகப்பனாக ஏற்றால் எந்த மனிதப்பதரும் கோபப்படாமல் இருப்பதில்லை..அற்ப மனிதனுக்கே இந்த விஷயத்தில் இத்தனை கோபம் வரும்போது....

அனைத்தையும் படைத்த சர்வ வல்லமை கொண்ட வல்லோன்,தான் படைத்த மனிதன் தன்னை வழிபடாமல்,அவனைப்போன்ற ஒருவனை,அல்லது அதனினும் கீழானதை தனக்கு இணை என கற்பிக்க...,கடவுள் கோபம் கொள்ள்க்கூடாது,தண்டிக்கக்கூடாது என வாதிடுவது அறிவுக்கு பொருந்தாத முட்டாள்தனம் என்பது விளங்கும்....

எனவே தெருவில் போகிறவனையெல்லாம் கடவுளாக்கி வழிபடாமல், கடவுளின் தன்மைகளை எவ்வித விருப்பு வெறுப்பின்றி, உணர்ந்து, அறிந்து, அவனை அடையாளம் கண்டு அவன் வழி செல்வதே சரியானதாக இருக்கும்.... அப்படியே செய்வோமாக.....

அன்புடன்
ரஜின்

Wednesday, April 20, 2011

என்னவொரு மாற்றம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.

இவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.

நான் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது...இன்ஷா அல்லாஹ்....

"ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.

ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன்.

என்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்!!!'

நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன்.

செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றி அன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.

பாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுபதற்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன்.

சரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.

தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.

நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது.என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.

மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது....

ஆ...இன்னொரு பிரச்சனையும் இருக்கின்றது....முஸ்லிம்கள்.....

நான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.

என்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.

எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன்.

நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான்.

அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.


'அஸ்-------ஸ--------லாமு அலைக்கும்'


அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை.

உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.

என் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.

அவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன்.

அவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.

ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும்' மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.

விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.


கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.

அந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.

இஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன்.

நிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.

மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.




ரமலான் மாதம் வந்தது....

இந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா?'


அனுமதித்தேன்.....

சிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ(1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.

ரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.

அது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...

ஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.

சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.

'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'


அவர் கூற ஆரம்பித்தார்...

'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்'


'நான் எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்'

'முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்'

'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்'

என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...

'முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்'

'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'

என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், ' சகோதரர், நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்"

பின்னால் 'அல்லாஹு அக்பர்(2) ' என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.

நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.

தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.

மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....

உணர ஆரம்பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது.

தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

'சகோதரர், நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்'

அவர் சொன்னார், 'நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அவரை பின் தொடர்ந்து கூறினேன், 'வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.

முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.

நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.
என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்"

சுபானல்லாஹ்...

இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.

முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.

இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.

உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு/பல்கலைகழகத்திற்கு சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.

சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


அரபி வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:

1. ருக்கூ - குனிந்த நிலையில் இறைவனை தொழுவது.

2. அல்லாஹு அக்பர் - இறைவனே மிகப் பெரியவன் (God is Great)

Brother Idris Towfiq's website:

1. idristawfiq.com. link

My sincere thanks to:

1. Canadian Dawah Association.

This article translated from (not a word to word translation):

1. Irish priest embraces Islam - Canadian Dawah Association website. link

2. IQRAA TV - British Catholic priest converted to Islam. link

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹமத் அ


http://ethirkkural.blogspot.com/2011/04/blog-post_19.html

Sunday, April 17, 2011

தடை செய்யப்பட்டவை


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவல ப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற  முஸ்லிம்களின், உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.         

நூல் : முஸ்லிம் : 5010  
 
உலக வாழ்க்கை வீண் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்திடையவர்களுக்கு நிச்சயமாக 
மறுமையின் வீடே மிகவும் மேலானதாகும்.                                                       

அல் குர் ஆன் - 6 : 32   

தேர்வுகள் முடிந்துவிட்டது - விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

10 -ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது.  மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

விடுமுறை நாள்களின் என்ன பண்ணலாம்?

1. ஆங்கில மொழிதிறனை (English language skill) வளர்த்துகொள்ள முயற்சிக்கவும் : ஆங்கில மொழிதிறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழி பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கில திறனை வளர்த்து கொள்ள மிக சிறந்த வழி ஆங்கில குர்ஆனை தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்க்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும், அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.

2. தொடர்பு திறனை (Communication skill) வளர்ப்பது : வேலைவாய்ப்பு பெற மிக முக்கிய தகுதியாக கருதபடுவது தொடர்பு திறன் எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்த தொடர்பு திறன்  Communication skill -யை வளர்த்து கொள்ள மிக முக்கிய தேவை தைரியம், தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பிறருக்கு சொல்ல பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால் நல்ல தாயிகளாக ( பிரசாரகர்களாக) மாற பழகுங்கள். Communication skill  என்பது  ஒவ்வொறு முஸ்லீமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும். 
"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்." (குர்ஆன் 3 : 104)

தினமும் குர் ஆனை எடுத்து தொழுகைக்கு பிறகு வீட்டில் உள்ளவர்காளுக்கு படித்துகாட்டுங்கள், முடிந்தவரை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பழகுங்கள்.  குர் ஆனுடைய கருத்துகளை பிறருக்கு சொல்வதற்க்கு வெட்க படாதீர்கள், தைரியமாக சொல்லுங்கள். இப்படி தொடர்சியாக செய்வதன் மூலம் நம்முடைய Communication skill - யை வளர்த்து கொள்ள முடியும்.

கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்து கொள்ளுங்கள் : தற்போது பள்ளிபடிப்பு படிக்கவே கணினி அறிவு  (Computer knowledge)அவசியமாகின்றது, எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..)கற்றுகொள்ளுங்கள். மேலும்  internet-ன் பயன்பாட்டையும் கற்றுகொள்ளுங்கள், குறிப்பாக  மின் அஞ்சல் (E -mail) துவங்குவது, google Search, விக்கீபீடியா போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள், இன்டெர்னெட் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் கொட்டிகிடக்கின்றது. தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது, எனவே பெற்றொர்கள்தான் மாணவர்களை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்த பழக்க படுத்த வேண்டும்

10 மற்றும் +2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு : விடுமுறையை வீணாகாமல் இப்போதே பொது தேர்விற்க்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள்.  9 - ஆம் வகுப்பு முடித்து 10 - ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 10 - ஆம் வகுப்பு பொது தேர்விற்க்கும். +1 முடித்து +2 செல்லும் மாணவர்கள் +2  வகுப்பு பொது தேர்விற்க்கு தயாராகுங்கள்.  +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள்  தேசிய அளவில் மருத்துவம் பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு  தயாராகுங்கள்.

 +2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகள் :

IIT-JEE - இந்த தேர்வு IIT, IISc - ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIEEE - NIT  மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIPMT -  மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தபடும் தேர்வு, உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் , வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
HSEE - IIT -யில் ஒருங்கினைத்த 5 ஆண்டு M.A. படிப்பிற்க்கான தேர்வு. அனைத்து பிரிவு மாணவர்களும் எழுதலாம், குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்

மாணவர்களே!  நேரத்தை வீணாகாமல் இப்போதே போட்டி தேர்வுகளுக்கும் , பொது தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்.  தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

அனைத்து போட்டி தேர்வுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

S.சித்தீக்.M.Tech

அன்னா ஹசாரே கைதாவாரா? பரபரப்பு செய்தி!!

 ஊழலுக்கு எதிராக பாசிஸ்டுகளுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த காந்தியவாதியின் ஊழல்! இவர் செய்த ஊழலை பார்த்து அரசியல்வாதிகளே கலங்கிபோய் இருக்கிறார்கள்! இதோ அன்னா ஹசாரே ஊழல் விவரம்!

அண்ணா ஹசாரே தலைமை வகிக்கும் ஹிந்த் சுராஜ் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்திய ஊழலை பற்றிய ஜுடிசியல் விசாரணையின் விபரங்கள் இதோ!

இந்த டிரஸ்ட் உதவி தலைவர் சந்திபூசனும் இதில் உறுப்பினரான பிரசாந்த் பூசனுக்கும் சம்பத்தப்பட்ட சீ. டி வெளியில் வந்த பிறகு கதாநாயகன் ஹசாரே உடைய ஊழல் வெளியில் வந்து பரப்பரப்பை உண்டாக்கி கொண்டிருகிறது.

அந்த இருவர்களுடை வீடியோவில் சில சந்தேகங்கள் இருந்தாலும் ஹசாரே சம்பந்தப்பட்ட ஊழலில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்து இருகிறார்கள்.

அண்ணா ஹசாரே தன்னுடையே பிறந்தநாள் தினத்திற்கு டிரஸ்ட் உடைய பணம்
இரண்டரை லட்சம் பணத்தை சட்டவிரோதமாக செலவளித்தது.

மத சார்பற்ற கல்வி படிப்பதற்காக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை
கோவில் கட்டுவதற்காக கொடுத்தார் என்றும் விசாரணை கமிஷன் கூறி உள்ளது.

இந்த நிறுவனத்திற்கு அரசு ஒதுக்கி கொடுத்த நிலத்தை சட்டவிரோதமாக வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் கணக்குகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளதாக மகாராஷ்டிரா மத்திரி சுரேஷ் ஜெயின் குற்றம் சுமத்தி இருந்தார்.

அலஹபாதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம் வாங்கியதில் முத்திரைதாள் வாங்கியதில் கள்ள கணக்கு காட்டியிருப்பதாக மகாராஷ்டிரா அரசுசுக்கு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் 1995 இல் இவர் ட்ரஸ்ட்க்கு சொந்தமான பணத்தை தனது பிறந்த நாளைக்கு செலவழித்தார் என்பது விசாரணை கமிசனால் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்தான் நேர்மை ஊழல் என்று பேசுகிறார்.

ஒரு ட்ரஸ்ட்க்கு சொந்தமான பணத்தை எடுத்து தனது பிறந்த நாள் விழாவுக்கு செலவு செய்வது ஒரு காந்தியவாதின் அழகு இல்லை. ட்ரஸ்ட்க்கு சொந்த மான நிலத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு எழுதி கொடுத்தது மட்டுமல்லாமல் அதை பதிவு செய்யும்போது முத்திரை தாள் மோசடி செய்வது என்பது ஒரு கேவலமான செயல். ஊழழலை பற்றி பேச அன்னா ஹசாரேக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

ஓஓஓ இதுதான் காந்திய தருமமோ ?


வாசகர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நல்லவர்கள் ஒரு நாளும் ஹிந்துத்துவா பாசிஸ்ட்களோடு சேரமாட்டார்கள்.



நன்றி http://www.sinthikkavum.net/

Saturday, April 16, 2011

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் (55). இவரது மகள் மீனாட்சி (18) குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.

பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் அருகில் உள்ள தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்ற மீனாட்சி ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால், மாலை 4 மணி அளவில் அங்குள்ள கிணற்றில் மீனாட்சி பிணமாக மிதப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

தீயணைப்பு துறையினர் உதவியோடு மீனாட்சி பிரேதத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்காக சவக் கிடங்கில் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது மீனாட்சியின் இரு மார்பகங்களும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை மாயமாகியிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தந்கனர்.

இது குறித்து தகவலறிந்த மீனாட்சியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பல்லடம் டி.எஸ்.பி. தங்கதுரை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

இதனையடுத்து, மீனாட்சியின் பிரேதம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த பல்லடம் மருத்துவமனை டாக்டர்கள், சவக் கிடங்கு ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவிக்கு நேரந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேற்கண்ட செய்தியை நாளிதழ்களில் வாசித்தவுடன் நெஞ்சம் குமுறியது.கண்கள் அடைத்துக் கொண்டன.அடப் பாவிகளா,வன்முறைக்கும் ஒரு வரம்பில்லையா?


இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக.

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரு கர்ப்பவதியான முஸ்லிம் பெண்ணை கற்பழித்துவிட்டு,  பெரிய சூலாயுதத்தால் அந்த பெண்ணின் வயிற்ரை கிழித்து - வயிற்றினில் இருந்த அந்த பிஞ்சு சிசுவை வெளியே எடுத்து தூக்கி வீசி 
எறிந்ததை 
மறக்க முடியாது.

இவைகள் எல்லாம் நடப்பது நம் இந்திய திரு நாட்டில்தான்.இங்குதான் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் புள்ளி விவரப்படி உலகில் மிக அதிக அளவில் பெண்களுக்கான குற்றங்கள் நடப்பது இந்தியாவில்தான் என்கிறது.

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

இதுவல்லவோ ஜனநாயகம்


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்


நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

நபிகள் நாயகம் 

உமர்[ரலி] காலத்தில் பெண்கள் தங்கள் மகர் தொகையை அதிகரித்துக் கொண்டு செல்ல ஆண்களால் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.தங்களது குறையினை ஜனாதிபதி உமர்[ரலி] அவர்களிடம் முறையிட்டனர்.அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டஉமர்[ரலி] அவர்கள் அப்போதைய பாராளுமன்றமான வெள்ளி ஜும்மாவில்புதிய சட்டத்தை அறிவிக்கிறார்கள் .
அதாவது ,இனி பெண்கள் மகரமாக நானூறு திர்கம்களுக்கு மேல் கேட்கக் கூடாது என்று மகர் தொகையை நிர்ணயம் செய்கிறார்கள்.
அப்போது ஜும்மாவிர்க்கு வந்திருந்த ஒரு நபி தோழியர் அவர்கள் உடன் எழுந்து ,அமீருல் முஹ்மீன் அவர்களே ,"பெண்களுக்கு மகராக ஒரு பொருட் குவியலே கொடுத்தாலும் அவற்றிலிருந்து திரும்ப பெறாதிர்கள்,,"என்று பொருள்படக் கூடிய குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி இறைவனே பெண்களுக்கான மகரை நிர்ணயிக்கத போது அதை மாற்ற உங்களுக்கு உரிமை எப்படி வந்தது ?என்று கேட்டார்.
ஆடிப்போன உமர்[ரலி] அவர்கள் உடன் இந்த பெண் இறைவனின் சட்டத்தை சொல்லிவிட்டார்.அதுவே சரியானது நான் தொகை நிர்ணயித்ததை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.என்று கூறினார்கள்.
இன்றைய உலகில் வாய் கிழிய பேசப்படும் ஜனநாயக நாட்டில் ஒரு கவுன்சிலரிடம் கூட போலீசாரால் நியாயத்தை நிலை நிறுத்த முடியவில்லை.
ஆனால் இஸ்லாம் காட்டிய ஜனநாயகத்தில் ஒரு சாதாரண பெண்ணால் ஜனாதிபதியிடமே நீதியை தட்டி கேட்க முடிகிறது இது போன்று ஒரு ஜனநாயகத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கும் காண முடியாது.காந்திஜி பாராட்டிய இந்த ஜனநாயகத்தை முஸ்லிம் நாடுகள் இன்று தொலைத்து விட்டதால் ஓநாய் களெல்லாம் இன்று கண்ணீர் வடிக்கவேண்டிய நிலை.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!