Wednesday, January 25, 2012

மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்!


மதுரை மாநகராட்சி வளாக ரோட்டில்நேற்று காலை, 70 வயது மூதாட்டி ஒருவர்மயங்கிக் கிடந்தார். மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் எனபலரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல்ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தார். அசைவுகள் இல்லாததால்சந்தேகப்பட்ட சிலர்அவரை நெருங்கினர்.
அப்போது அவர்மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. சிகிச்சைக்கு அனுப்ப, "108' ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், "காயம் இல்லாததால்அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாது'எனக்கூறிதிரும்பிச் சென்றனர்
பின்போலீசாருக்கு தகவல் தெரிவித்துஅவர்கள் வந்ததும்மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். பசி மயக்கத்தில் இருந்ததை அறிந்த போலீசார்அவருக்கு உணவு கொடுக்க முயற்சித்தனர்.http://www.manithan.com/photos/thumbs/2012/01/moothsaddy.jpg
அதுவரை வாய் திறக்காதவர்பேசத் தொடங்கினார். ""எனக்கு உணவே வேண்டாம்தயவு செய்து என்னை விடுங்க...'' எனஅழுதார். ""மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த குஞ்சம்மாள் நான்.
எனக்கு ஒரு மகள்மகன் . சிரமப்பட்டு அவர்களை வளர்த்தேன். விவசாய வேலைகளை செய்து,திருமணம் ஆன என் மகனுடன் வசித்து வந்தேன்.
 ஒரு விபத்தில் என் கால் காயம் அடைந்தது. இரண்டு நாள் வீட்டில் முடங்கிய என்னையாரும் கவனிக்கவில்லை. என் மகன் விரட்டியதால்அங்கிருந்து பஸ் ஏறினேன்.
15 நாட்களுக்கு முன்மதுரை வந்தேன். கையில் இருந்ததை வைத்துஉணவு தேவையை சமாளித்தேன். பணம் தீர்ந்த பின்பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. கடந்த நான்கு நாட்களாக பட்டினி.
காதில் தங்கத்தோடு இருந்தாலும்அதை வைத்து சாப்பிட மனம் வரவில்லை. எனக்கு சாப்பாடு தர உறவுகள் மறுத்ததால்உணவை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது,'' எனஅழ துவங்கினார்.
அவரை சமாதானப்படுத்திய போலீசார்கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்துமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
------------------------------------------------------------
2:215அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!