Sunday, September 28, 2014

ஆ ஆ ஆடை அவிழ்ப்பு ! படம் இணைப்பு!!




இஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் விமர்சிப்பதுண்டு.உண்மையில்இஇஸ்லாம் எங்கு?எப்படி? எவ்வாறு? ஒரு பெண்ணை கண்ணியப் படுத்த வேண்டுமோ அங்கு அவ்வாறு அப்படி பெண்ணை கண்ணியப் படுத்துகிறது என்பது தான் உண்மை.

இஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என நிரூபிக்க விளையும் பலர் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்தில் ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.இஸ்லாமிய ஆடையில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணை இன்னுமொரு ஆடைக் கலாச்சாரத்தை பின்பற்ற அழுத்தம் பிரயோகித்தால் எந்த ஒரு உண்மையான முஸ்லிம் பெண்ணும் விரும்பமாட்டாள்.அது எவ்வாறான சந்தர்ப்பமாக இருந்தாலும் சரியே!

அந்த விரும்பாமையை தெளிவாக உலகமே பார்க்கும் வன்னம் இம்முறை கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி வழங்காததால்இ தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறி இருக்கிறது கட்டார் பெண்கள் அணி.
சத்தியத்தின் முன் அசத்தியம் நிற்காது என்பதை இது தெளிவு படுத்துகின்றதல்லவா??


வெளியேறிய அணி உலக மக்களுக்கு விடுக்கும் செய்தி 'நாங்கள் அற்ப விளையாட்டிற்காய் இஸ்லாத்தை பணயம் வைக்க தயாரில்லை என்பதே!இ'
இவ் ஆடைக் கலாச்சாரத்தின் மூலம் விளையாடுபவர்களினது விளையாட்டுத் திறன் அதிகரிக்கவோ எதிரணிகளுக்கு தொந்தரவாகவோ ஒரு போதும் அமையப் போவதில்லை.அப்படி இருக்க இவ் அணியை இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்தை காட்டி ஏன் வெளியேற்ற வேண்டும்?


இத்தடைகள் ஒன்றும் முஸ்லிம் பெண்களுக்குப் புதியது அல்ல.பாடசாலைகளில் பல்கலைக்கழகங்கலில் பொது இடங்களில் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்திற்கான தடைகள் வலுப்பது யாவரும் அறிந்ததே.ஏன்?இலங்கையின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் கூட இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்திற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.எனினும் இத் தடைகள் பலதை தகர்த்தெறிந்து சாதனைகள் பலதையும் எம் முஸ்லிம் பெண்கள் தன்னகப்படுதிய பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இதில் நகைச்சுவை என்ன வென்றால் இத் தடை விதிப்பு முஸ்லிம் பெண்களின் நலனுக்கே என காரணம் காட்டிய சில சந்தர்ப்பங்களும் உள்ளன.
பத்தோடு பதினொன்றாக முஸ்லிம்களும் இருக்க வேண்டும் என்பதே அவர்களினது கொள்கை .வேறு அவர்கள் செய்வது சரியா? பிழையா? என்பதை சிந்தனை கொள்வதை விட்டும் அவர்கள் பின்பற்றும் மதமும் இன்றைய நாகரீகம் என்ற பெயரில் அணியப்படும் ஆடைகளும் தடுக்கின்றன.

எவ்வாறான நாகரீகம் மிகைத்த ஒருவராக இருந்தாலும் சரி இன்று விளையாட்டுக்களின் போது அணியப்படும் ஆடையை சாதாரணமாக அணிந்து கொண்டு உலா வர மாட்டார்கள்.சாதாரணமாக அணிய வெட்கிக்கும் கேவலமாக அணியும் ஆடையை விளையாட்டுக்களின் போது அணிவது மாத்திரம் கேவலம் இல்லையா?? ஏன் சிந்திக்க மறுக்கின்றீர்களோ?


இவ்வாறான ஆடைக்குறைவுக் கலாச்சாரம் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை இவ்வாறானவர்கள் சிந்திக்கவோஇஏற்கவோ தயாரில்லை?இஸ்லாம் காட்டிய ஒரு வழி முறையை புறக்கணித்தால் ஒரு போதும் அதற்கு மாற்று வழிகள் தீர்வாகப் போவதில்லை.மாறாக பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வரலாற்றுச் சான்றுகள் பல எமக்கு நிரூபணம் செய்கிறது.

அண்மையில் உலக அரங்கில் பிரபலமான ஒரு செய்திதான் இங்கிலாந்து இளவரசியின் குட்டைப் பாவாடை நிகழ்வொன்றின் போது பறந்து பர பரப்பை ஏற்படுத்தி இருந்தது.இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிஸபத் வில்லியம் இன் மனைவி கேட் மேட்டில்டன் இற்கு நீளமான பாவாடைகள் அணியும் பணி அறிவுறுத்தி இருந்தமை இங்கே கோடிட்டு காட்ட வேண்டிய மேலுமொரு விடயமாகும்.

இஸ்லாமிய வழி முறையை இவ் இளவரசி பின்பற்றி இருந்தால் இவ் அவமரியாதை இவ் இளவரசிக்கு ஏற்பட்டிருக்குமா?

சீனா இங்கிலாந்து சுவிஸ்சிலாந்து உகண்டா ஆகிய நாடுகளில் விபச்சாரம் அநாச்சாரம் கலாச்சார சீர்கேடுகள் போன்றவை நடப்பதை தடுக்க குட்டைப் பாவாடையை தடை செய்துள்ளார்கள்.

நாம் எமது உடலை மறைப்பதன் மூலம் எமது மானம் காக்கப்படுவது மாத்திரமின்றி அதன் மூலம் விளைவாக்கப்படும் அனாச்சாரங்களும் தடுக்கப்படுகின்றன.அவ்வாறான ஆடைக் கலாச்சாரம் இடத்திற்கு இடம் மாறுபடுவதன் மூலம் மானம் காக்கப் படும் அளவு அளவு மாறுபடுவது நகைப்பிற்கு உரியது.


வெற்றிக்காய் மானத்தை சிறிது இழப்பதில் தவறில்லை என்று யாராவது கூறுவார்களாக இருந்தால் மானத்தை பணத்திற்காய் விற்கும் வேசிக்கும் இவர்களுக்கும் என்ன தான் வேறு பாடு உள்ளது?


ஆக்கம்:
துறையூர்.ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்


மோடிக்கு அமெரிக்காவில் அதிகரிக்கும் எதிர்ப்பு !இப்போ லேடி,எப்போ மோடி

மேடிசன் ஸ்கொயர் கார்டனில் இன்று பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சி ஒரு புறம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் மற்றொரு புறம் மோடிக்கு எதிர்ப்பு அலையும் அங்கு உக்கிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதி மற்றும் பொறுப்பிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டணி என்ற அமைப்பில் ஒன்று கூடுபவர்கள் மோடிக்கு எதிராக ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மோடிக்கு வரவேற்பு நடக்கும் மேடிசன் ஸ்கொயர் பகுதிக்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் போராட்டம் என்று இவர்கள் தயாராகி வருகின்றனர்.

2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஒரு மாநில முதல்வராக இவர் அடக்கவில்லை என்பது இவர்களது பெரும் புகார் ஆகும்.

இதுவல்லாமல் சீக்கியர்கள் நீதியமைப்பு என்ற மனித உரிமை அமைப்பும் மோடிக்கு எதிராக 30ஆம் தேதி சிடிசன் கோர்ட் என்ற நடைமுறையை மேற்கொள்கிறது. வெள்ளை மாளிகையில் மோடியை வரவேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா சிகப்பு கம்பளம் விரிக்கும் அதே நேரத்தில் வெள்ளை மாளிகைக்கு வெளியே இந்த மனித உரிமை அமைப்பின் சிட்டிசன் கோர்ட் நடைபெறுகிறது. இது அமெரிக்கா முழுதும் அன்று லைவ் ஒளிபரப்பாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான நியாயப்பாடு இல்லையென்றாலும் அமெரிக்காவுக்கு முதன் முதலாக வருகை தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு இதனால் நெருக்கடியே என்று தெரிகிறது.

இதோடல்லாமல் நியூயார்க்கில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்று பெடரல் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் அளித்த அழைப்பாணைகளை மோடியிடம் சேர்ப்பிப்பவருக்கு 10,000 டாலர்கள் வெகுமதியும் அறிவித்துள்ளது.

இப்படியெல்லாம் நடப்பதை அமெரிக்க அரசு தடுக்குமா அல்லது அங்கு ஜனநாயக உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது செப்டம்பர் 30ஆம் தேதி தெரியவரும்.

http://tamil.thehindu.com/world/
திங்கள், செப்டம்பர் 29, 2014

SOME COMMENTS BY THE HINDU READERS....

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட காரணமாயிருந்த மோடியை குற்றவாளி என்னும் கண்ணோட்டத்தில் அமெரிக்கா வாழ் மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்ல,உலகம் முழுவதும் வாழும் ஈர மனதுடையவர்களின் பார்வையும் அதுதான்.என்றாவது ஒருநாள் தமது குற்றத்திற்கான தண்டனையை இந்திய சட்டத்தின் மூலம் மோடி அனுபவித்தே ஆகவேண்டும்.

மோடி மீது வீசும் "ரத்தக் கவிச்சும்" "நரமாமிச நாற்றமும்" "பிரதமர்" என்ற போர்வைக்குள் மறைத்து விட முடியாது வெளிப்பட்டே தீரும், அதன் எதிரொலி தான் அமெரிக்காவில் நடைபெறும் போராட்டங்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மனித உரிமை போராளிகளுக்கு !

U . N . O ல் அணைத்து நாட்டு தலைவர்களும் ( ராஜா பக்ஷே உட்பட) பேசுவது என்பது இயல்பு. அப்படி இறுகையில் அமெரிக்காவும் உலகமும் சேர்ந்து இவரை மட்டும் அழைத்தது போல ஒரு பிரமாண்ட மாயையை ப.ஜ.க விடம் கையூட்டு பெற்ற பல மீடியாக்கள் மிகை படுத்தி செய்தி வெளியிடுவதும், இதை ஒரு கூட்டம் யாருமே சாதிக்காததை மோடி சாதித்தது போல பிரமாண்ட படுத்துவதும் வேடிக்கையாக உள்ளது.

இப்படியெல்லாம் நடப்பதை அமெரிக்க அரசு தடுக்குமா அல்லது அங்கு ஜனநாயக உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது செப்டம்பர் 30ஆம் தேதி தெரியவரும்.???? ஐயா, தனது நியாயமான ஜனநாயக வுரிமைகளுக்கு அமெரிக்கா என்றும் செவி சாய்க்கும். ஜெயலலிதா நீதி தேவனிடம் மண்டியிட்டது போல் , இந்த மோடியும் ஒருநாள் மண்டியிடுவார். நீதி பெற வெகு தூரம் பயணிக்க வேண்டியிருகிறது. அந்த லேடியை போல் இந்த மோடியும் ஒரு நாள் செய்த தவறுக்கு பரிகாரம் பெறுவார்.

-----------------------------------------------------------------------------
உண்மையான ஜனநாயக நாடு அமெரிக்காதான் என்பது இதன் மூலமும் தெரிந்து கொள்ள இயலும்.ஒரு நாள் நீதி வெல்லும்.அமெரிக்காவை மற்ற நாடுகள் போல் எண்ண வேண்டாம்.இங்கு சட்டம்தான் ஆட்சி செய்யும்,சட்டத்தின் முன் ஒபாமாவும்,சாதாரண குடி மகனும் ஒன்றுதான்.மற்ற நாடுகளில் ஆண்டானுக்கும்,பணக்காரனுக்கும்,ஏழைக்கும்,பெரும்பான்மைக்கும்,சிறுபான்மைக்கும் வேறு விதமான - ஏற்றத் தாழ்வுள்ள சட்டங்களே நடைமுறையில் உள்ளன.

18 வருடங்கள் கழிந்து இந்த லேடிக்கு இப்போது தண்டனை கிடைத்துள்ளது.அப்ப மோடிக்கு?



Thursday, September 25, 2014

மோடிக்கு, அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

 அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக குஜராத் கலவர வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் மூலம் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை மோடி புரிந்துள்ளதாக அமெரிக்கா நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு ஒன்று மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் சம்மனை பெற்ற 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த கெடுவுக்குள் பதில் அளிக்காவிட்டால் ஒரு தரப்பாக தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே மனித உரிமைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு சர்வதேச சட்டத்தின் படி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இடம் உண்டு.
அந்த வகையில் தொடரப்பட்டுள்ள மோடிக்கு எதிரான வழக்கில் 2002-ம் ஆண்டு கலவரத்தின் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக இனபடுகொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் நிருபிக்கபட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும். குஜராத் கலவரத்திற்கு பின்னர் மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது.
9 ஆண்டு கால விசா தடை மோடி பிரதமரானதும் அமெரிக்க அரசால் விலக்கிகொள்ளப்பட்டது. பிரதமர் ஆனதும் மோடி முதல் முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாடடு மண்ணில் கால் வைப்பதற்கு முன்பாகவே நீதிமன்ற சம்மன் அனுப்பபட்டுள்ளது.
இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அமெரிக்கா சென்றிருந்த நிலையில் 1984ஆம் ஆண்டு சீக்கியர் கலவரம் தொடர்பாக வழக்கு தொடர்ப்பட்டு நீதிமன்றம் சம்மன்கள் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 23, 2014

திருப்பூர் முஸ்லிம்களுக்கு ஆபத்து!அதிர்ச்சியில் மக்கள் !!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் அளித்த மனுக்களை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பெற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்

திருப்பூர், ஸ்ரீ நகரில் மஸ்ஜிதே இ.மதீனா அஹ்லுஸ் சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மசூதி கட்டி, கடந்த 22 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக சில நபர்கள், இஸ்லாமியர்கள் யாரும் ஸ்ரீ நகர் பகுதியில் இருக்கக்கூடாது என்று மிரட்டி வருகின்றனர். மேலும், வாடகைக்கு குடியிருந்து வந்த இஸ்லாமிய மக்களை, வீட்டு உரிமையாளர்களிடம் கூறி காலி செய்ய வைத்துவிட்டார்கள். இதேபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு அளிப்பதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மஸ்ஜிதே இ.மதீனா அஹ்லுஸ் சுன்னத் நிர்வாகிகள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் மனு அளித்தனர்.

tamil.thehindu.com/tamilnadu/பாதுகாப்பு-கோரும்-திருப்பூர்-ஸ்ரீ-நகர்-இஸ்லாமியர்கள்/article6438500.ece

இந்தியா ஒரு ஜனநாயக நாடு தானே?ஏன் இந்த பாகுபாடு?அரசு என்பது எல்லாருக்கும் பொதுதான் அல்லவா?ஒருவர் எண்ணிக்கையில் குறைவு அல்லது சிறுபான்மையோர் என்பதற்காக எவ்வாறு சிலர் மிரட்டுவதைக் கண்டிக்காமலும்,தண்டிக்காமலும் இருக்க இயலும்?
ஓட்டு கேட்டு வரும் போது மட்டும்,நாங்கள் சிறுபான்மை மக்களுக்கும் உதவிகள் செய்வோம் என கூப்பாடு இடும் அரசியல் கட்சிகள்,ஓட்டு வேட்டை நடத்திய பின் கண்டும் காணாமல் இருப்பது முறையா?
அரசே,உடனே நடவடிக்கை எடு.பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவன செய்.இதுவே நடுநிலைமை கொள்கை.

மோடியே ஓடிப் போ!அமெரிக்காவில் கொதிப்பு!!

 பிரதமர் நரேந்திர மோடியின் வாஷிங்டன் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வருகையின்போது கருப்புக் கொடி ஆர்ப்பட்டம் நடத்த அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்துள்ளனர்.

நியூயார்க்கில் 26-ஆம் தேதி நடக்கவுள்ள ஐ.நா. மன்றக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதன் மறுநாள் (27–ஆம் தேதி) அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் உரை நிகழ்த்தவுள்ளார்.

தனை அடுத்து, இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கும் அவர் செல்லவுள்ளார். அவரது வருகைக்காக நியூயார்க்கில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஒருபுறம் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய அமைப்புகள் திட்டமிட்டு வரும் நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' முடிவு செய்துள்ளது.

அந்த அமைப்புடன் இன அழிப்புக்கு எதிராக போராடும் ஏ.ஜெ.ஏ. மற்றும் சில அமெரிக்க வாழ் இந்திய அமைப்புகள் இதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இது குறித்து 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' கூறும்போது, "2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை தூண்டிவிட்ட நரேந்திர மோடியின் வருகைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். செப்டம்பர் 30-ஆம் தேதி வாஷிங்டனின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஒபாமாவை அவர் சந்திக்கவுள்ளார். அப்போது, வெள்ளை மாளிகைக்கு எதிரே அமைந்திருக்கும் அதிபர் பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

அதே போல, ஏ.ஜெ.ஏ. அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கும் சீக்கிய குழுக்குகளுக்கும், "பிரதமர் மோடியின் வருகைக்காக கருப்புக் கொடி காட்டுவோம்" என்று அழைப்பு விடுத்துள்ளன.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை ரத்து செய்ய வேண்டும் என 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' அந்நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு மனு அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

THE HINDU TAMIL

முஸ்லிம்களின் படுகொலைகளுக்கு காரணமான மோடியின் வருகையை எதிர்த்து - பல சீக்கிய அமைப்புக்களும்,பல்வேறு மனித உரிமைக் கழகங்களும் போராட்டத்தில் குதித்துள்ளன.ஆனால் இதுவரை மோடி அதற்கு மன்னிப்பு கேட்கவேயில்லை.ஆனால் முஸ்லிம்களை அரவணைத்து செல்லும் படியாக சில வார்த்தைகளை அவர் கூறி வருகிறார்.அப்படி அவர் தான் பழைய தவறிலிருந்து திருந்தி இருப்பாரேயானால்,முதலில் செய்த தவறுக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பும்,அவர் கட்சியில் உள்ளவர்களின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பேச்சை கண்டித்தும்,rss ஐ அடக்கியும் வைக்க வேண்டும்.அது அல்லாமல்,வெறும் இன்டர்வியூவுக்காக அல்லது பேச்சுக்காக அப்படி செய்வாரேயானால்,முஸ்லிம்கள் ஒரு போதும் அவரையும்,அவர் சார்ந்த கட்சியையும் நம்பப் போவதில்லை.

Sunday, September 21, 2014

பள்ளி வாசல் இடிப்பு,மக்கள் கொதிப்பு,பதற்றம்

திருச்சி கல்லனையில் உள்ள ஒரு பள்ளிவாசலின் ஒரு பகுதியை இடித்து விட்டு கரிகாலன் மண்டபம் கட்ட உள்ளனர். இதனை அப்பகுதி இஸ்லாமிய மக்கள் எதிர்த்தும் எந்தவொரு பயனும் இல்லை.

எனவே இஸ்லாமிய இயக்கங்களும், பொதுசார் அமைப்புகளும் இந்த விசயத்தில் தலையிட்டு அம்மக்களுக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Read more: http://www.adiraipirai.in/2014/09/blog-post_643.html#ixzz3E12T3IkW

Friday, September 19, 2014

சபாஷ் மோடி! இன்னும் எதிர்பார்க்கிறோம் !

பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு மோடி பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டி ஞாயிற்றுக்கிழமை சிஎன்என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதன் சில பகுதிகளை இன்று சிஎன்என் வெளியிட்டுள்ளது.

அல்கொய்தா அமைப்பினர் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். அல்கொய்தா தாளத்துக்கு, இந்திய முஸ்லிம்கள் ஆடுவார்கள் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் மாயையில் உள்ளனர் என்று அர்த்தம். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள், இந்தியாவுக்காகத்தான் சாவார்கள். அவர்களின் தேசப்பற்று சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது என்று மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள 170 மில்லியன் முஸ்லிம்களில் அல்கொய்தாவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் கிடையாதா என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி "உலகில் மனிதாபிமானம் இருக்க வேண்டுமா இல்லையா என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை. மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளோர் எல்லோரும் ஓரணியின் நிற்க வேண்டிய தருணம் இது. உலகில் தற்போது எழுந்துள்ள சிக்கல் எந்த ஒரு நாட்டுக்கும் அல்லது இனத்துக்கும் எதிரானது கிடையாது, மனிதாபிமானத்துக்கு எதிரானது. எனவே நாங்கள் மனிதாபிமானத்துக்கும், மனிதாபிமானம் இல்லாதவர்களுக்கும் நடுவே நடக்கும் போராட்டமாகத்தான் இதை பார்க்கிறோம்" என்று மோடி பதிலளித்துள்ளார்.

இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து கருத்து தெரிவித்து மோடி கூறுகையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் கலாச்சாரம் மற்றும் வராலாற்று அடிப்படையில் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. இந்தியா- அமெரிக்கா உறவில் சில ஏற்ற இறக்கங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 21ம் நூற்றாண்டில் இந்திய அமெரிக்க உறவில் புதிய வடிவம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

மோடியின் இந்த மனமாற்றம் உண்மையாகவே இருக்குமானால்,அவரை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.அதே வேலை,வெறும் வாய் வார்த்தை ஆக இல்லாமல்,அதை மோடியும் முஸ்லிம்கள் விஷயத்தில் நடந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிரான rss கொள்கைகள் வாபஸ் பெறப்பட்டு,எல்லா மக்களும் சமமே என்ற அடிப்படியில் அவர்கள் நடந்து கொண்டால்,இந்தியா வல்லரசாக,நல்லரசாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.இந்துக்கள்,முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் மற்றும் இன்ன பிற மக்கள் அனைவரும் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் என ஒன்று சேரவேண்டும்.அதற்கு,மோடி மற்றும் rss அமைப்பு உண்மையாகவே நடந்து கொள்ளவேண்டும்.
இஸ்லாம்,தீவிரவாதத்தை ஏற்கவில்லை.அனைவருக்கும் பொதுவாக,சமமாக நடக்கவே சொல்கிறது.எனவே,அல் காய்தா மிரட்டலுக்கு யாரும் செவி சாய்க்க போவதில்லை.எனவே,அரசும் கலவர படத்தேவை இல்லை.மேலும்,அந்த மிரட்டலை காரணம் காட்டி,அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தும்,தண்டித்தும் வரும் போக்கு மாறிட வேண்டும்,அந்த அப்பாவி மக்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
இதையும் மோடி செய்ய வேண்டும்.பேச்சுக்காக அல்லாமல்,செயலில் காட்டினால் - அதுவே நம் நாட்டிக்கு நல்லது.
---------------------------------------------------------------------------------------
நபிகள் நாயகம் ஸல் அவர்கள், இரண்டு உமரில் ஒரு உமருக்கு ஹிதாயத் கொடு யா அல்லாஹ் என கேட்டார்கள்.அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.நமக்கு உமர் ரலி அவர்கள் கிடைத்தார்கள்.அதே போல நாமும் கேட்போம்,யா அல்லாஹ்,இந்திய பிரதமர் மோடிக்கு ஹிதாயத் கொடுப்பாயாக.அதன் மூலம் இன்னும் வலுவூட்டுவாயாக.எல்லா மக்களும் சுபிட்சமாக வாழ அருள்வாயாக

Wednesday, September 17, 2014

இஸ்லாத்தை ஏற்றார் பெரியார்!பரபரப்பு வீடியோ வெளியீடு !!

இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையத்தின் சார்பில் உருவான பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா? என்ற ஆவன படத்தின் வெளியீட்டு விழா இன்று மாலை 6மணியளவில் வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் நடை பெற உள்ளது .

இந்த நிகழ்ச்சியில் ஆவணப்படத்தின் இயக்குனர் சிபி சந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்,திரைப்பட இயக்குனர்கள் RK செல்வமணி , ராஜ ராஜா ,கண்ணன் ,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர் .

இந்த படத்தின் குறுந்தகடை திரைப்பட இயக்குனர் அமீர் வெளியிட முதல் பிரதியை திருமாவளவன் பெற்றுக்கொள்கிறார் . இந்த திரைப்படத்தின் ஒருபகுதியில் மறைந்த அப்துல்லாஹ்வுடன் (பெரியார்தாசன்) உரையாடும் காட்சியில் நமதூரை சார்ந்த அன்சாரி அவர்கள் உரையாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மீடியா தொடர்பான பணிகளை நமது தளத்தின் முதன்மை பங்களிப்பாளர் ஹசன் மேற்கொண்டு வருகிறார்.

thanks
www.adiraixpress.in/2014/09/blog-post_505.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!